Thursday, 1 May 2014

கோழை

செயலில் தெரிய வரும்
        தவறுக்காக
செய்யாமல்
        இருப்பதும்...!

கண் முன்
        தோன்றிய எதிர்ப்புகளுக்காக
கண் நீர்
        விடுவதும்...!

எழுதிய மை -  நம்மை
        சுடுமென நினைத்து
உண்மையை
        உரைக்காமலிருப்பதும்...!

உயிருக்கும்
       உறவுக்கும் பயந்து
அடிமையாய்
       வாழ்வதும்...!

கிளியிடம் கோழையாய்
       கூண்டுக்குள்
வாழச் சொன்னது
       மனிதனின் ஆசை...!

சுதந்திரமாய்
        மரத்தினில்
சுற்றித் திரிய சொன்னது
       இறைவனின் படைப்பு...!


Let it be, how god has created rather than forcing and making it as our slave

No comments: