Saturday, 19 April 2014

வாக்குகள்



விழுகின்ற வருடங்களின்
    வர்ணனையை மாற்றிக்கொள்ள
விலைமதிப்பற்றதென நெஞ்சினில்
          எழுதிக் கொள்வோம்
அழிந்துபோகா மையினை
    விரல் நுனி சுமக்கும் முன்னே...!

ஆராவாரம் அடங்கிவிடும்
    அச்சடித்த காகிதங்களும்
தீர்ந்துவிடும்  -    தீராதது
            நம் கனவுகளே - அதனை
கரைசேர்க்கும்
     கரங்களுக்கு கைகொடுப்போம்
கட்டிய கோட்டையில்
            ஏழைக்கான குரலும் ஒலித்திருக்க...!

மந்திரக் கோல் -   உன்னிடமே
    மனி மகுடம்
சூடிக் கொள்வது
    மனிதத்தை மதிக்கின்ற
மானுடமாகட்டும்
    அச்சடித்த காகிதங்களை
ஆராதிக்கின்ற  
    அர்ச்சகர்களை விட...!

No comments: