Wednesday, 16 April 2014

பலம்

வலியில்லாமல் வளர்ந்திருந்தால்
      வாடை காற்றில் கூட
நம் புன்னகை
      புதைந்துவிடும்...!

தோல்வி நம்மை
      தொட்டதில்லை என்றால்
தடுமாறிய கால்கள் கூட
       நம்மை தடம் புறட்டிவிடும்...!

ஏற்ற இரக்கங்கள்
      பாதை வழி
வந்ததில்லை எனில்
      காற்றில் மிதந்துவரும்
நெற்பதர் கூட
      நம்மை பாதாளத்தில்
தள்ளிவிடும்...!

தோல்வியும் இங்கு
      தேவைதான் - இல்லை
என்றவுடன் தெரியவரும்
      உண்மை முகம் - உன்னை
முடக்கிவிடாமல் இருக்க...!

No comments: