விளையாடிய
குழந்தை தலை
சாய்த்து சிரித்தது
நம்பிக்கையை
தொலைத்து
நிம்மதி தேடிய
ஜிவங்களின் அவநம்பிக்கை
தொலைந்து போக...!
கரை தாண்டிய
ஆமை - தன்
புலன்களை அடக்கி
தன்னை காத்திருந்தது - அங்கு
கரை ஒதுங்கிய
கட்டு மரங்கள்
உழைத்துவிட்ட களைப்பில்
உரங்கத் தொடங்கியது...!
வீசிய காற்றில்
வளர்ந்துவிட்ட அலைகள்
கூட்டத்தின் கால்
நனைத்து சென்றது - அங்கும்
வீனையில் தோன்றிய
இசை வெள்ளம்
வீதி வழி
ஓடியது...!
பவனிவந்த பகலவன்
பணிவுடன் விடை
கேட்டு மறைந்தது
பனிவிழும் இரவில்
வானும் கடல்
நீலமும்
கலக்கிற
மையப் புள்ளியில்...!
No comments:
Post a Comment