Saturday, 5 April 2014

கடற்கரை

விளையாடிய
       குழந்தை தலை
சாய்த்து சிரித்தது
       நம்பிக்கையை தொலைத்து
நிம்மதி தேடிய
       ஜிவங்களின் அவநம்பிக்கை
தொலைந்து போக...!

கரை தாண்டிய
       ஆமை - தன்
புலன்களை அடக்கி
        தன்னை காத்திருந்தது - அங்கு
கரை ஒதுங்கிய
        கட்டு மரங்கள்
உழைத்துவிட்ட களைப்பில்
        உரங்கத் தொடங்கியது...!

வீசிய காற்றில்
       வளர்ந்துவிட்ட அலைகள்
கூட்டத்தின் கால்
        நனைத்து சென்றது - அங்கும்
வீனையில் தோன்றிய
        இசை வெள்ளம்
வீதி வழி ஓடியது...!

பவனிவந்த பகலவன்
        பணிவுடன் விடை
கேட்டு மறைந்தது
        பனிவிழும் இரவில்
வானும் கடல் நீலமும்
        கலக்கிற மையப் புள்ளியில்...!

No comments: