Saturday, 31 May 2014

அந்தி வானம்

புன்னகை அங்கே
       கொட்டிகிடந்தது
தோட்டத்தில் சில
      புதுப் பூக்கள்
மலர்ந்திருப்பதாய் - அந்
      நட்சத்திரக் கூட்டம்...!

சிதறிய பிம்பம்
     மீண்டும் சேர்வதாய்
சிலை வடித்திருந்த
    வெண் மேகங்கள்...!

தூரத்தில் நின்றிருந்த
    முழு நிலவின்
அழகினை
     படம்  பிடிக்க
வந்து சென்ற
     மின்னல் ஒளி...!

சிதறிய மழைத்துளி
     சித்தரித்த ஓவியமாய்
குடை பிடித்த
     வானவில்...!

மனம் மயங்கும்
      மண் வாசனை
ஒன்றிரடாய்
     விழுந்து  விட்ட
மழைத் துளியின்
      கலப்பினில்...!

கதிரவன் மறைகின்ற
      வேளையிலும்
கண்ணில் தென்படும்
      கலையழகு பிம்பங்கலாய் - இவ்
அந்தி வானம்...!

No comments: