Monday, 16 June 2014

இடி முழக்கம்

மலை முகடுகள்
     சுமந்து நின்ற
நிலவொளியின்
     மூன்றாம் பிறை...!
 
முல்லை நில
      நீர் வளத்தில்
முகம் புதைத்திருந்த
      வெண் தாமரை...!

ஆணை முகனின்
      அர்ச்சனைக்காக
அந்தரத்தில் வளர்க்கப்பட்ட
     அருகம் புல்...!

தூரத்தில் நின்று
      விட்டெரிந்த கற்களில்
தோன்றி மறையும்
      அலைகளில்
உருகிக் கொண்டிருந்த
     சிறுவன்...!

எட்டுத்திக்கும் நடுநடுங்க
      நெற்றி நடுவில்
அடித்‌தர் போல
      அச்சுருத்திய
இடி முழக்கம்...!

No comments: