அன்பினில்
தொலைந்து போகும்
அறிவு - பகையினில்
தோய்வதுவுமில்லை...!
கஷ்டத்தில்
சோர்ந்து போகும்
ஆசை - வெற்றியில்
சோரம் போவதில்லை...!
ஏழை இங்கு
அழிக்க வேண்டிய
இதயத்தின் ஆசையும்
செல்வந்தன்
தொலைக்க வேண்டிய
செல்வம் தரும்
பலமும் - தோய்ந்து
போகும் வரை
தொடும்
துரத்தில் இல்லை - நாம்
தொலைத்து விட்ட
நிம்மதி...!
No comments:
Post a Comment