Thursday, 26 June 2014

தோய்வதுவுமில்லை

அன்பினில்
       தொலைந்து போகும்
அறிவு - பகையினில்
       தோய்வதுவுமில்லை...!

கஷ்டத்தில்
      சோர்ந்து போகும்
ஆசை - வெற்றியில்
      சோரம் போவதில்லை...!

ஏழை இங்கு
      அழிக்க வேண்டிய
இதயத்தின் ஆசையும்
      செல்வந்தன்
தொலைக்க வேண்டிய
      செல்வம்  தரும்
பலமும் -  தோய்ந்து
       போகும் வரை
தொடும்
        துரத்தில் இல்லை  - நாம்
தொலைத்து விட்ட
        நிம்மதி...!

No comments: