Sunday, 29 June 2014

வண்ணத்துப் பூச்சி

வாழ்வின் வதைபாடுகளை
      உலகை காணுமுன்னே
கண்டெடுத்தாலும் - அதன்
      சிறகுகளில்தான் எத்தனை
ஆராவாரம்...!

உந்தன் பலம்
     திரட்டும் பக்குவத்தில்
பக்தனானோம் - உலகினில்
    வாழத் தேவையானதென
மன்றங்கள் முழங்கிய
   அந் நாளிலே...!
  
உன் மேனியெங்கும்
     சிதறிக்கிடக்கும் வண்ணங்கள் - இன்றும்
எங்கள் வாண்டுகளின்
     விளங்கமுடியா அதிசயம்...!

வாழ்வின் பாதியை
      கூண்டுக்குள் கழித்தாலும்
வாழுகின்ற காலமட்டும்
      சந்தோசத்தில் சுற்றித்
திரியச் சொன்ன
     வரம் உனக்கு...!

No comments: