வாழ்வின் வதைபாடுகளை
உலகை காணுமுன்னே
கண்டெடுத்தாலும் - அதன்
சிறகுகளில்தான் எத்தனை
ஆராவாரம்...!
உந்தன் பலம்
திரட்டும் பக்குவத்தில்
பக்தனானோம் - உலகினில்
வாழத் தேவையானதென
மன்றங்கள் முழங்கிய
அந் நாளிலே...!
உன் மேனியெங்கும்
சிதறிக்கிடக்கும் வண்ணங்கள் - இன்றும்
எங்கள் வாண்டுகளின்
விளங்கமுடியா அதிசயம்...!
வாழ்வின் பாதியை
கூண்டுக்குள் கழித்தாலும்
வாழுகின்ற காலமட்டும்
சந்தோசத்தில் சுற்றித்
திரியச் சொன்ன
வரம் உனக்கு...!
No comments:
Post a Comment