Tuesday, 15 July 2014

பிறப்பு

முதன் முறை
     முகம் பார்க்க
கண் இமை திறந்த
     சிறு குழந்தை
பாதி மயக்கத்திலிருந்தும்
      பதறி எடுத்த
முத்தமிட்ட தாய்...!

தாயின் கருவரை
      தந்துவிட்ட
சுகத்தின் இழப்பில்
      தொண்டைக் குழி
ஏறி இறங்க
      அழுதிருந்த குழந்தை
வாரிசு வந்ததென
     வாரி அணைக்கின்ற
வயதானோர்கள்...!

நாட்களுடைய மாற்றத்தின்
       மாறுபட்ட ஸ்பரிசமும்
உள்ளத்தில் உலகம்
      விதைக்கப்போகும்
உணர்வுகளை
      வண்ணங்களாய் ஏற்கப் போகும்
வெள்ளை காகிதமாய் - அவ்
       வெளுத்துப் போன
பிள்ளை முகம்...!

No comments: