Friday, 25 July 2014

இறுதி நாள்

கற்பனையில் அந்த இறுதி நாள் ...


நீலவானம் - அன்று
     நெருப்பு மழை
பொழியும் - தான்
      எற்றுக்கொண்ட கரைகளை
கண்ணீறாய் வெளியேற்ற...!

சுற்றி வந்து தழுவலில்
       சுகம் தந்து செல்லும்
தென்றல் - அன்று
     தெளித்து விட்டு போகும்
தன்னை  சூழ்ந்துகொண்ட
     அழுக்குகளின் அமிலத்தில்...!

எழுகின்ற சுரியன்
       ஏரி பிழம்பினை
விட்டெறியும் நிலமகளின்
       நிலைகுலைந்த
ஈர்ப்பு விசை
   மாற்றத்தில்...!

அமைதியே உருவானவளின்
      அடிவயிற்றில் சேர்த்துவைத்த
கழிவுகள் கலங்கடிக்க
       மனித படைப்புகளுக்கு
வலை விரிக்ப் போகும்
       கடல் கன்னி...!
 

கோட்டைகளும் கோடிகளும்
        இமயம்  வரை ஓடி
ஒளிந்து கொள்ள
       ஒளி  உருவாய்  
தோன்றியவன்
        சொல்லப் போகும்
ஒற்றை வரி - இங்கு
        மனிதம் உருவாக்கிய
வேற்றுமைகள்
         உருவமற்று போனது - எந்தன்
மறு படைப்பிற்கு...!

No comments: