பகல் இறக்கின்ற
பொழுதில்
வெண்ணிலவின்
பிறை நெற்றி மட்டும்
தன்னந்தனியாய்....
கன நாழிகையில்
கருப்பு தேவதைகள்
தங்கள் வெற்றியில்
கூச்சலிடுவதாய் எங்கும்
கருப்புத்திரை மட்டும்....
நான் எரியூட்டிய
சிறு தீபம் மட்டும்
ஆற்றலுடன்
வெண்மை நிரப்பியது - அந்த
வெளுத்துப் போன
இருட்டுக்குள்...


