பச்சைக் கிளியின்
சிறகில் அமர்ந்தேன்
உதறிற்று தன்
சிறகின் கறையென்று.....
பனைக் குறுத்தின்
திணவுகளாக
மயிலிறகின் மென்மையை
உணரச் சென்றவன்
உறைந்து போனேன் - அதன்
உணர்வற்ற வார்த்தைகளில்....
மூடிய தாமரை மொட்டில்
தரை இறங்கினேன்
காதலியை காண வந்தவன்
கனலால் கருக்கினான்...
நீரின் ஓட்டத்தின்
எதிராய் ஓடினேன் - அந்த
மலையருவியின் பிறப்பிடத்தில் - அவர்கள்
காதலின் இரகசியம்
பித்தனாக்கிற்று என்னை...
எல்லாம் என்னை
துரத்திற்று
என் தாய் மடியில்
தலை சாய்ந்தேன்
வாரி அனைத்துக் கொண்டாள் - தன்
வான்லோகக் கங்கையென்று....