வாழ்வின் வதைபாடுகளை
உலகை காணுமுன்னே
கண்டெடுத்தாலும் - அதன்
சிறகுகளில்தான் எத்தனை
ஆராவாரம்...!
உந்தன் பலம்
திரட்டும் பக்குவத்தில்
பக்தனானோம் - உலகினில்
வாழத் தேவையானதென
மன்றங்கள் முழங்கிய
அந் நாளிலே...!
உன் மேனியெங்கும்
சிதறிக்கிடக்கும் வண்ணங்கள் - இன்றும்
எங்கள் வாண்டுகளின்
விளங்கமுடியா அதிசயம்...!
வாழ்வின் பாதியை
கூண்டுக்குள் கழித்தாலும்
வாழுகின்ற காலமட்டும்
சந்தோசத்தில் சுற்றித்
திரியச் சொன்ன
வரம் உனக்கு...!
Sunday, 29 June 2014
Thursday, 26 June 2014
தோய்வதுவுமில்லை
அன்பினில்
தொலைந்து போகும்
அறிவு - பகையினில்
தோய்வதுவுமில்லை...!
கஷ்டத்தில்
சோர்ந்து போகும்
ஆசை - வெற்றியில்
சோரம் போவதில்லை...!
ஏழை இங்கு
அழிக்க வேண்டிய
இதயத்தின் ஆசையும்
செல்வந்தன்
தொலைக்க வேண்டிய
செல்வம் தரும்
பலமும் - தோய்ந்து
போகும் வரை
தொடும்
துரத்தில் இல்லை - நாம்
தொலைத்து விட்ட
நிம்மதி...!
தொலைந்து போகும்
அறிவு - பகையினில்
தோய்வதுவுமில்லை...!
கஷ்டத்தில்
சோர்ந்து போகும்
ஆசை - வெற்றியில்
சோரம் போவதில்லை...!
ஏழை இங்கு
அழிக்க வேண்டிய
இதயத்தின் ஆசையும்
செல்வந்தன்
தொலைக்க வேண்டிய
செல்வம் தரும்
பலமும் - தோய்ந்து
போகும் வரை
தொடும்
துரத்தில் இல்லை - நாம்
தொலைத்து விட்ட
நிம்மதி...!
Monday, 16 June 2014
இடி முழக்கம்
மலை முகடுகள்
சுமந்து நின்ற
நிலவொளியின்
மூன்றாம் பிறை...!
முல்லை நில
நீர் வளத்தில்
முகம் புதைத்திருந்த
வெண் தாமரை...!
ஆணை முகனின்
அர்ச்சனைக்காக
அந்தரத்தில் வளர்க்கப்பட்ட
அருகம் புல்...!
தூரத்தில் நின்று
விட்டெரிந்த கற்களில்
தோன்றி மறையும்
அலைகளில்
உருகிக் கொண்டிருந்த
சிறுவன்...!
எட்டுத்திக்கும் நடுநடுங்க
நெற்றி நடுவில்
அடித்தர் போல
அச்சுருத்திய
இடி முழக்கம்...!
சுமந்து நின்ற
நிலவொளியின்
மூன்றாம் பிறை...!
முல்லை நில
நீர் வளத்தில்
முகம் புதைத்திருந்த
வெண் தாமரை...!
ஆணை முகனின்
அர்ச்சனைக்காக
அந்தரத்தில் வளர்க்கப்பட்ட
அருகம் புல்...!
தூரத்தில் நின்று
விட்டெரிந்த கற்களில்
தோன்றி மறையும்
அலைகளில்
உருகிக் கொண்டிருந்த
சிறுவன்...!
எட்டுத்திக்கும் நடுநடுங்க
நெற்றி நடுவில்
அடித்தர் போல
அச்சுருத்திய
இடி முழக்கம்...!
Saturday, 31 May 2014
அந்தி வானம்
புன்னகை அங்கே
கொட்டிகிடந்தது
தோட்டத்தில் சில
புதுப் பூக்கள்
மலர்ந்திருப்பதாய் - அந்
நட்சத்திரக் கூட்டம்...!
சிதறிய பிம்பம்
மீண்டும் சேர்வதாய்
சிலை வடித்திருந்த
வெண் மேகங்கள்...!
தூரத்தில் நின்றிருந்த
முழு நிலவின்
அழகினை
படம் பிடிக்க
வந்து சென்ற
மின்னல் ஒளி...!
சிதறிய மழைத்துளி
சித்தரித்த ஓவியமாய்
குடை பிடித்த
வானவில்...!
மனம் மயங்கும்
மண் வாசனை
ஒன்றிரடாய்
விழுந்து விட்ட
மழைத் துளியின்
கலப்பினில்...!
கதிரவன் மறைகின்ற
வேளையிலும்
கண்ணில் தென்படும்
கலையழகு பிம்பங்கலாய் - இவ்
அந்தி வானம்...!
கொட்டிகிடந்தது
தோட்டத்தில் சில
புதுப் பூக்கள்
மலர்ந்திருப்பதாய் - அந்
நட்சத்திரக் கூட்டம்...!
சிதறிய பிம்பம்
மீண்டும் சேர்வதாய்
சிலை வடித்திருந்த
வெண் மேகங்கள்...!
தூரத்தில் நின்றிருந்த
முழு நிலவின்
அழகினை
படம் பிடிக்க
வந்து சென்ற
மின்னல் ஒளி...!
சிதறிய மழைத்துளி
சித்தரித்த ஓவியமாய்
குடை பிடித்த
வானவில்...!
மனம் மயங்கும்
மண் வாசனை
ஒன்றிரடாய்
விழுந்து விட்ட
மழைத் துளியின்
கலப்பினில்...!
கதிரவன் மறைகின்ற
வேளையிலும்
கண்ணில் தென்படும்
கலையழகு பிம்பங்கலாய் - இவ்
அந்தி வானம்...!
Wednesday, 21 May 2014
விதை
வீசிய புயல் காற்றில்
சிதைந்திருந்த சிறகுகளுடன்
பாட்டாம் பூச்சி
பாதி வயிறு பசித்திருந்தாலும்
பாவெமென உள்ளங்கையில்
ஏந்தி வந்த சிறுவன்...!
மகானோ
மண்டியிடச் சொன்ன
பழிக்கின்ற கூட்டத்தின்
தலை மகன்
பட்டென கன்னத்தில்
அரைந்து விட...!
அழுகையுடன் அவன்
அனைத்து வந்த
ஜீவனின் துடிப்பும் - அவன்
இதய நரம்புகளை
முறுக்கேற்றி
கொண்டிருக்க...!
பாதை வழி
பள்ளத்தில்
சறுக்கி விழுந்தவனின்
சடலமட்டும் கிடப்பதாய்
மூர்ச்சையாகி விட...!
ஓடி வந்த சிறுவனின்
உதவ முடியா
கரங்களானாலும்
உரைத்துவிட்ட குரலில்
உயிர் காத்து நிற்க
விழுந்தவன் விழிகளில்
விழுந்ததோ - அவன்
அறைந்த கன்னங்கள்
பல் வலியில்
பருத்திருந்ததையே...!
உறக்கமில்லா இரவு
விடிந்து விட
காத்து வைத்த
அன்பின் கரம் பற்றி
அழச் சென்றவன்
கண்ணீர் விடுகிறான்
நேற்றிரவு பெய்திருந்த
மழை வெள்ளத்தில்
இடிந்து விழுந்த
காரைச் சுவற்றுக்குள்
சிதைந்திருந்த
சடலத்திற்கு...!
இறந்தவன் இன்றும்
எங்கள் ஆசானின்
ஆண்டு முதல் உரையில்
மனிதத்தின் மென்மையை
மொட்டாக இருக்கையிலே
உணர்த்திய - எங்கள்
உண்மைத்
தலைவனாக...!
சிதைந்திருந்த சிறகுகளுடன்
பாட்டாம் பூச்சி
பாதி வயிறு பசித்திருந்தாலும்
பாவெமென உள்ளங்கையில்
ஏந்தி வந்த சிறுவன்...!
மகானோ
மண்டியிடச் சொன்ன
பழிக்கின்ற கூட்டத்தின்
தலை மகன்
பட்டென கன்னத்தில்
அரைந்து விட...!
அழுகையுடன் அவன்
அனைத்து வந்த
ஜீவனின் துடிப்பும் - அவன்
இதய நரம்புகளை
முறுக்கேற்றி
கொண்டிருக்க...!
பாதை வழி
பள்ளத்தில்
சறுக்கி விழுந்தவனின்
சடலமட்டும் கிடப்பதாய்
மூர்ச்சையாகி விட...!
ஓடி வந்த சிறுவனின்
உதவ முடியா
கரங்களானாலும்
உரைத்துவிட்ட குரலில்
உயிர் காத்து நிற்க
விழுந்தவன் விழிகளில்
விழுந்ததோ - அவன்
அறைந்த கன்னங்கள்
பல் வலியில்
பருத்திருந்ததையே...!
உறக்கமில்லா இரவு
விடிந்து விட
காத்து வைத்த
அன்பின் கரம் பற்றி
அழச் சென்றவன்
கண்ணீர் விடுகிறான்
நேற்றிரவு பெய்திருந்த
மழை வெள்ளத்தில்
இடிந்து விழுந்த
காரைச் சுவற்றுக்குள்
சிதைந்திருந்த
சடலத்திற்கு...!
இறந்தவன் இன்றும்
எங்கள் ஆசானின்
ஆண்டு முதல் உரையில்
மனிதத்தின் மென்மையை
மொட்டாக இருக்கையிலே
உணர்த்திய - எங்கள்
உண்மைத்
தலைவனாக...!
Subscribe to:
Posts (Atom)