வியர்வை சிந்தி
உழைத்த பணம்
வீடு வருவதில்லை
விற்று தீர்ந்த
கணக்கு நம்
வியப்பை குறைத்ததில்லை...!
ஊர் மதிக்க
வாழ வெண்டுமென்று
வளர்த்தெடுத்த
பிள்ளை - இன்று
வீதியிலே கிடக்க
தன்மானம் கூட
மிஞ்சலையே
வற்றிய கண்ணீரில்
வாழ்வு மாற
தவம் கிடக்கும்
பெற்றோர்...!
இளம் வயதிலேயே
வாழ்வைத் தொலைத்த
பெண்களின்
எண்ணிக்கை - இங்கு
குறையாவிட்டாலும் - அரசு
விற்பனை சரியில்லையென்று
வீதியெங்கும்
விரிவாக்க மறப்பதில்லை...!
தனைமறக்க
ஏற்றுக்கொள்ளும்
போதையும்
தடுக்க நினைக்காத
அரசியல்வாதிகளின்
சுயநலமும்
தடம் புரண்ட
இளைஞர்களின்
சுய வாழ்வின்
புதைக் குழி...!
No comments:
Post a Comment