Friday, 10 January 2014

உதிர்வு

வஞ்சனையில்
      விழுகின்ற
வாளும்...!

வற்றாத நதிமகளின்
      நீர் வளத்தில்
உடைகின்ற கரையும்
     ஒன்றுதான்...!

இரண்டுமே
      நம்பிக்கை என்னும்
நாரிலிருந்து
     உதிர்ந்தவை...!

Wednesday, 1 January 2014

அன்னை தெராசா

ஏந்திய கரங்களை
       இறக்கியதில்லை
எச்சில் வந்து
      விழுந்த போதிலும்...!

இளகிய மனம்
       எற்றுக்கொண்ட
தண்டனையில்
     அன்னையானால் - இவ்
எடுத்தெறியப்பட்ட
     குழந்தைகளின்
எதிர்காலமாய்...!

அவள் தாழ்த்திக்
       கொண்ட கெளரவத்தில்
வாழ்ந்திருக்கிறாள் - இன்றும்
      ஆருயிர்கள் வாழ
வேண்டிய பாதையின்
      அர்த்தமாக...!

Saturday, 28 December 2013

புத்தாண்டு

வானம் தன்
      வர்ணனையை கூட்ட
பெற்றுக் கொண்டது
      பெண்மையின்
கண் இமையோரா
      மையினை...!

தென்றல் தன்
      தனலினை குறைக்க
சுமந்து கொண்ட
     ஈரப்பதம்...!


திங்கள் தன்
      முகப் பொலிவினை
ஏற்றிக் கொள்ள
      ஏற்றுக் கொண்ட
சுரிய வெளிச்சம்...!

நீர் தன்னில்
      நிலைக்க நினைத்த
தூய்மைக்கு
    துணை கொண்ட
மூலிகையின்
     தழுவல்...!

நெருப்பு தன்
      வெப்பம் தணிக்க
நிரப்பி விட்ட
     நீர்திவளைகள்...!

நிலம் தன்னை
      நிந்தித்தவரையும்
நேசிக்க கற்று கொண்ட
     நிலையான மௌனம்...!

புதிதாய் பிறக்கட்டும் நம்மில் இப் புத்தம் புது ஆண்டில்....

பூக்களிடம்
     பெற்றுக்கொண்ட
முக மலர்ச்சி...!

புத்தம் புது
      நீருற்றில் எடுத்திருந்த
புத்துணர்ச்சி...!

நல்லவையே நடக்குமென்ற
     நம்பிக்கையை  கூட்டுகின்ற
நணயத்தின் ஒரு பக்கம்...!

பிழை அறியா
      மழலையின் மனம் கானும்
சந்தோசம்...!

தன் பழமையை மட்டும்
     தோற்கடிக்க தயங்காமல்
ஏற்றுக் கொள்ளும்
     மாற்றங்கள்...!

முடிவில்லா ஏற்ற
      இறக்கங்கள் நம்மை
தொடர்ந்தாலும்
      தொலைக்காத நம்
முன்னேற்றப் பாதை...!

இனிய புத்தாண்டு நல்வழ்த்துகள்........

Tuesday, 24 December 2013

சேருமிடம்

மலர்களின் வாசனையை
     சுமந்து கொள்ளும்
மண்ணில் விழுகின்ற
      மழைத் துளி...!

பனி விழுந்த
       பின்னும் விடியாத
வானிலையில்
       வண்ணத்துப் பூச்சியின்
உடல் ஒட்டியிருந்த    
      மினுமினுப்பு...!

தென்றலின் தழுவளில்
       தனை மறந்து
இசை மீட்டும்    
       உதவாதென
விட்டு ஏறியப்பட்ட
       உடைந்து போன
 மூங்கில்...!

Saturday, 14 December 2013

கண்டெடுக்காத


அவன் கல்லறையின்
     மீதிருந்த ஒற்றை
ரோஜா கூறிற்று
     அவன் இறப்பின்
ரகசியத்தை...!

அவன் உறவுகளின்
      விழி வழியே
வழிந்திருந்த
       கண்ணீர் காட்டியது
அவன்
      கண்டெடுக்கா  அன்பின்
ஆழத்தை...!

உறவுகளின்
     வறையரையை விட
அன்பு உயர்ந்தது - அது
      கிடைக்குமிடம்
எதுவானாலும்..!