ஏந்திய கரங்களை
இறக்கியதில்லை
எச்சில் வந்து
விழுந்த போதிலும்...!
இளகிய மனம்
எற்றுக்கொண்ட
தண்டனையில்
அன்னையானால் - இவ்
எடுத்தெறியப்பட்ட
குழந்தைகளின்
எதிர்காலமாய்...!
அவள் தாழ்த்திக்
கொண்ட கெளரவத்தில்
வாழ்ந்திருக்கிறாள் - இன்றும்
ஆருயிர்கள் வாழ
வேண்டிய பாதையின்
அர்த்தமாக...!

No comments:
Post a Comment