Thursday, 23 January 2014

குளிர்

வான்மழையாய் பொழிகின்ற
      பனித் துளி - அங்கே
மண்ணுக்குள் முகம்
     புதைக்கின்ற
கருஞ் சேவல்...!

கண் மறைக்கும்
     காரிருள் - அப்பொழுதே
கண் இமை
     திறப்பதாய் திறக்கின்ற
ஆலயத்தின்
      கதவுகள்...!

விழித்திருந்தும்
       தாயவளின் புடவையை
போர்வையாக்கிக் கொண்ட
       சிறுவன்...!

விடியாத வானிலையில்
      வீதியெங்கும்
வலம் வரும்
      மானிடத்தின்
காதருகே வெப்பம்
      தேடச் சொல்லும் - இக்
குளிர் காற்று...!

No comments: