வான்மழையாய் பொழிகின்ற
பனித் துளி - அங்கே
மண்ணுக்குள் முகம்
புதைக்கின்ற
கருஞ் சேவல்...!
கண் மறைக்கும்
காரிருள் - அப்பொழுதே
கண் இமை
திறப்பதாய் திறக்கின்ற
ஆலயத்தின்
கதவுகள்...!
விழித்திருந்தும்
தாயவளின் புடவையை
போர்வையாக்கிக் கொண்ட
சிறுவன்...!
விடியாத வானிலையில்
வீதியெங்கும்
வலம் வரும்
மானிடத்தின்
காதருகே வெப்பம்
தேடச் சொல்லும் - இக்
குளிர் காற்று...!
No comments:
Post a Comment