வானம் தன்
வர்ணனையை கூட்ட
பெற்றுக் கொண்டது
பெண்மையின்
கண் இமையோரா
மையினை...!
தென்றல் தன்
தனலினை குறைக்க
சுமந்து கொண்ட
ஈரப்பதம்...!
திங்கள் தன்
முகப் பொலிவினை
ஏற்றிக் கொள்ள
ஏற்றுக் கொண்ட
சுரிய வெளிச்சம்...!
நீர் தன்னில்
நிலைக்க நினைத்த
தூய்மைக்கு
துணை கொண்ட
மூலிகையின்
தழுவல்...!
நெருப்பு தன்
வெப்பம் தணிக்க
நிரப்பி விட்ட
நீர்திவளைகள்...!
நிலம் தன்னை
நிந்தித்தவரையும்
நேசிக்க கற்று கொண்ட
நிலையான மௌனம்...!
புதிதாய் பிறக்கட்டும் நம்மில் இப் புத்தம் புது ஆண்டில்....
பூக்களிடம்
பெற்றுக்கொண்ட
முக மலர்ச்சி...!
புத்தம் புது
நீருற்றில் எடுத்திருந்த
புத்துணர்ச்சி...!
நல்லவையே நடக்குமென்ற
நம்பிக்கையை கூட்டுகின்ற
நணயத்தின் ஒரு பக்கம்...!
பிழை அறியா
மழலையின் மனம் கானும்
சந்தோசம்...!
தன் பழமையை மட்டும்
தோற்கடிக்க தயங்காமல்
ஏற்றுக் கொள்ளும்
மாற்றங்கள்...!
முடிவில்லா ஏற்ற
இறக்கங்கள் நம்மை
தொடர்ந்தாலும்
தொலைக்காத நம்
முன்னேற்றப் பாதை...!
இனிய புத்தாண்டு நல்வழ்த்துகள்........

No comments:
Post a Comment