மென்மையான ஸ்பரிசமும்
மெல்லிய சுவாசமும்
வாழுகின்ற போராட்டத்தில்
சிதைந்து போகும்
சித்திரக் கூடம்...!
ஏற்ற இறக்கங்கள்
எதுவானாலும்
சமத்துவத்தில்
சரிந்து போகா
சோதனைச் சாலை...!
ஆணவங்கள் அழிந்துபோயி
அன்பினில் மட்டும்
வாழுகின்ற
வரம் தந்த
அன்னையின் ஆலயம்...!
சரித்திரங்களும்
சாம்பலாகும்
சத்தியமும் சகதியில்
நிருத்தப்படும்...!
இவ்வுலகம் மட்டும்
கற்பனைக்கு எட்டாத
காலமாற்றத்தின்
கலங்கரை விளக்காய்...!
No comments:
Post a Comment