Tuesday, 24 December 2013

சேருமிடம்

மலர்களின் வாசனையை
     சுமந்து கொள்ளும்
மண்ணில் விழுகின்ற
      மழைத் துளி...!

பனி விழுந்த
       பின்னும் விடியாத
வானிலையில்
       வண்ணத்துப் பூச்சியின்
உடல் ஒட்டியிருந்த    
      மினுமினுப்பு...!

தென்றலின் தழுவளில்
       தனை மறந்து
இசை மீட்டும்    
       உதவாதென
விட்டு ஏறியப்பட்ட
       உடைந்து போன
 மூங்கில்...!

No comments: