மலர்களின் வாசனையை
சுமந்து கொள்ளும்
மண்ணில் விழுகின்ற
மழைத் துளி...!
பனி விழுந்த
பின்னும் விடியாத
வானிலையில்
வண்ணத்துப் பூச்சியின்
உடல் ஒட்டியிருந்த
மினுமினுப்பு...!
தென்றலின் தழுவளில்
தனை மறந்து
இசை மீட்டும்
உதவாதென
விட்டு ஏறியப்பட்ட
உடைந்து போன
மூங்கில்...!
No comments:
Post a Comment