Thursday, 26 September 2013

பிஞ்சுத் தடங்கள்

 பிழைகள் நிறைந்திருந்த
         பிள்ளை காலம்
கனிவானது - இந்த
         உயர்ந்துவிட்ட
கள்ளத் தனத்திற்கு...!

நெருங்கி நின்ற
       நெருப்பு கூட
இருந்ததில்லை
        பயமென - இப்
பதுங்கி வாழவேண்டிய
    பாசறைக்கு...!   

சந்தோசம் மட்டும்
    ஏந்தி நின்ற  
நடுக்கமில்லா நட்பில்
    ஊர் உறங்கும்
வேளையிலும்
    உழைப்பினில்
 உருவான மரக்கூடு
    கான சென்ற ஞபாகம்...!

ஒவ்வொரு நாளும்
      உணர்வுகளில் தோன்றி
மறியும் தேடலாய் - இப்
       பிஞ்சுத் தடங்களின்
பதிவு -  என்    
        பாதை வழி
  சிதறிய   முத்துக்களாய்...!

Friday, 13 September 2013

பட்டறிவு

வாழ்வு வாழக்
      கற்றுக் கொடுக்கிறது
வலுவற்ற பகுதியினை
      வலுவாக்க...!

ஏற்ற இறக்கங்களில்
       இதய நரம்பின்
துடிப்பினில் தூண்டப்பட்ட
       உற்ச்சாகமும்
உதவுகின்ற  
    சீிரமைப்பும்...!

மீண்டும் மீண்டும்
       இது மீள்வினையே
மீளுகின்ற தன்மை
        நம்மில்
நிலைக்கும் வரை...!

Wednesday, 11 September 2013

பறவைகள்

பொங்குகின்ற நீறூற்றில்
       முகம் பார்க்கின்ற
வெண் புறா
       வெடுக்கென நீர்
எடுத்துச் சென்ற
       கருப்புருவம்...!


வில்லேந்தி ஓடிய
       வேடன் - விடிகின்ற
வேளையில் கானம்
       பாடி நின்ற குயில்...!


கூண்டுக்குள்ளே வைத்தாலும்
       கொஞ்சு தமிழ்
பேசுகின்ற பிள்ளை
       குறைவுடன் இருந்தாலும்
நிறைவினை எடுக்கின்ற
       அன்னம்...!


விடியலை வரவேற்று
       கொக்கரிக்கின்ற சேவல்
செவ்வானம்
       சிவக்கின்ற வேலையில்
தோகை விரிக்கின்ற
        மயில்...!

Thursday, 5 September 2013

ஆசான்

அன்னை என்ற
     வார்த்தை சொல்ல
அடிமனத்தில்
     விட்டு சென்ற
அன்பு மொழி
     வார்த்தை...!

கரையில்லா ஆடை
     கசங்காது
உடுத்தக் கற்றுக்
    கொடுத்த
நடத்தை...!

ஏழு மாடி
     கட்டிடம் இல்லாவிட்டாலும்
எழுந்து நின்ற
     அரச மரத்தில்
எழுதி சென்ற
      வீரனின்
வாள் முனையில்
      ஓட்டியிருந்த  நம்பிக்கை...!

தொடங்கிய வாழ்வின்
      தொடக்கப் புள்ளி
எங்கள் ஸ்பரிசத்தில்
     மண்ணின் உணர்வுகளை
விட்டு சென்ற
     ஒற்றை அகல் விளக்கு...!

Saturday, 31 August 2013

முதல் இரயில்

மூடிய முகம்
     காட்டி  சிரிக்கின்ற
சிறு குழந்தை
     மின்னல் ஒளியில்
முகமறைக்கின்ற
      தாய்...!

ஓடையில் ஒய்யாரமாய்
     பயணிக்கின்ற நிலவு
ஓடுகின்ற பாதையில்
      உருக்குலைந்திருந்த
மண் குதிரை...!

வானத்தின் வனப்பினை
      வாசலாக்கிய
தென்னையின் இணைவு
      கண்ணில் விழுகின்ற
கலையழகு பிம்பமாய்
      வீதியெங்கும்
விதைக்கப்பட்ட
      விடி விளக்கு...!

விட்டு விட்டு பொழிகின்ற
      வானிலை - இங்கே
வாழ்ந்திருந்த
      உணர்வுகளில்
உணரப்பட்ட
    மண்வாசனை...!

இருபுறமும்
     சூழ்ந்திருந்த இருளினை
அலங்கரிக்கும்
      விளக்காய்
நட்சத்திரக் கூட்டமிருக்க 
      சாரைப் பாம்பென
விரைந்திருந்த
     மின்தொடர் வண்டி -...!