Saturday, 31 August 2013

முதல் இரயில்

மூடிய முகம்
     காட்டி  சிரிக்கின்ற
சிறு குழந்தை
     மின்னல் ஒளியில்
முகமறைக்கின்ற
      தாய்...!

ஓடையில் ஒய்யாரமாய்
     பயணிக்கின்ற நிலவு
ஓடுகின்ற பாதையில்
      உருக்குலைந்திருந்த
மண் குதிரை...!

வானத்தின் வனப்பினை
      வாசலாக்கிய
தென்னையின் இணைவு
      கண்ணில் விழுகின்ற
கலையழகு பிம்பமாய்
      வீதியெங்கும்
விதைக்கப்பட்ட
      விடி விளக்கு...!

விட்டு விட்டு பொழிகின்ற
      வானிலை - இங்கே
வாழ்ந்திருந்த
      உணர்வுகளில்
உணரப்பட்ட
    மண்வாசனை...!

இருபுறமும்
     சூழ்ந்திருந்த இருளினை
அலங்கரிக்கும்
      விளக்காய்
நட்சத்திரக் கூட்டமிருக்க 
      சாரைப் பாம்பென
விரைந்திருந்த
     மின்தொடர் வண்டி -...!

No comments: