Saturday, 24 August 2013

வாழ்வு

துன்புருத்த நினைக்கின்ற
       சந்தோசம் தண்ணீரில்
மிதக்கின்ற சருகினில்
      வாழுகின்ற வாழ்க்கை...!

வாழுகின்ற வாழ்வு
     ஒறு முறைத்தான் - நாம்
ஓடுகின்ற பாதையும்
     ஒரு வழிதான்...!

எடுத்தது
      எடுத்ததாக இருக்கட்டும்
விடுத்தது
     விடுத்ததாக இருக்கட்டும்...!

எழுதி எழுதி
     அழிப்பதற்கு
வாழ்வு - இங்கு
    கரும்பலகையில்
எழுதுவதோ...!

அழிகிப்
      போகும் உடல்
அழிந்தாலும்
     அழியாத - நம்
ஆன்மாவில்
     எழுதுவது...!

No comments: