முன்பனியில் முகம்
புதைத்த முல்லை - அங்கே
முகம் காட்டும்
கதிரவனின்
கனல் குறைத்த
மூங்கில்...!
மிதக்கின்ற முகிலின்
வேகத்தை குறைக்கும்
மலை முகடு - அங்கு
ஆளுயற அணிகலனாய்
வரைந்திருந்த
வானவில்...!
புன்னையில் உரங்குகின்ற
முன்று நாமம்
சுமந்தவன் - சுழன்று
காற்று அடித்தாலும்
அலைபாயாது ஓடுகின்ற
ஓடை...!
அங்கும் இங்கும்
ஆடித் திரிந்த
பாட்டாம் பூச்சி - அங்கே
ஆணவமும் அடிபணிய
நிறைவாய்
நிலைத்திருந்த அமைதி...!
No comments:
Post a Comment