Thursday, 5 September 2013

ஆசான்

அன்னை என்ற
     வார்த்தை சொல்ல
அடிமனத்தில்
     விட்டு சென்ற
அன்பு மொழி
     வார்த்தை...!

கரையில்லா ஆடை
     கசங்காது
உடுத்தக் கற்றுக்
    கொடுத்த
நடத்தை...!

ஏழு மாடி
     கட்டிடம் இல்லாவிட்டாலும்
எழுந்து நின்ற
     அரச மரத்தில்
எழுதி சென்ற
      வீரனின்
வாள் முனையில்
      ஓட்டியிருந்த  நம்பிக்கை...!

தொடங்கிய வாழ்வின்
      தொடக்கப் புள்ளி
எங்கள் ஸ்பரிசத்தில்
     மண்ணின் உணர்வுகளை
விட்டு சென்ற
     ஒற்றை அகல் விளக்கு...!

No comments: