Thursday, 26 September 2013

பிஞ்சுத் தடங்கள்

 பிழைகள் நிறைந்திருந்த
         பிள்ளை காலம்
கனிவானது - இந்த
         உயர்ந்துவிட்ட
கள்ளத் தனத்திற்கு...!

நெருங்கி நின்ற
       நெருப்பு கூட
இருந்ததில்லை
        பயமென - இப்
பதுங்கி வாழவேண்டிய
    பாசறைக்கு...!   

சந்தோசம் மட்டும்
    ஏந்தி நின்ற  
நடுக்கமில்லா நட்பில்
    ஊர் உறங்கும்
வேளையிலும்
    உழைப்பினில்
 உருவான மரக்கூடு
    கான சென்ற ஞபாகம்...!

ஒவ்வொரு நாளும்
      உணர்வுகளில் தோன்றி
மறியும் தேடலாய் - இப்
       பிஞ்சுத் தடங்களின்
பதிவு -  என்    
        பாதை வழி
  சிதறிய   முத்துக்களாய்...!

No comments: