மீதமான மின்னொளியில்
புதுமையின் துளிர்தளும்
புன்னகைக்கும் பூக்களை
சுமந்திருந்த
எல்லோரா ஓவியமாய் - இவ்
இளவேனிற் காலம்...!
மெருகேறியவன் மேனியின்
தக தககப்பில்
கொடுத்தவன் பரிக்க
வறண்டு போய்
தாகம் ஏற்றுக்கொள்ளும்
தவிப்பாய் - இக்
கோடை காலம்...!
கார் மேகத்தின்
கருணை - அதில்
விழுகின்ற கண்ணீரில்
கானகமும்
செழிக்கின்ற
கார் காலம்...!
பிரிவினை என்றாலும்
உலகத்தின் நியதியால்
சருகுகள் பிரிகின்ற
சத்தியத்தின்
சோதனையாய் - இவ்
இலையுதிர் காலம்...!
அருகிலிருக்கும்
அருகம் புல்லும்
முகம் மூடி
ஜொலிக்கின்ற
முன் பனிக் காலம்...!
முற்றத்தில்
வீற்றிருக்கும்
துளசியின்
தளிர்ச்சிக்கு
மென் பனி துவிய
பின் பனிக் காலம்...!
No comments:
Post a Comment