Saturday, 28 September 2013

பருவ காலம்

மீதமான மின்னொளியில்
       புதுமையின் துளிர்தளும்
புன்னகைக்கும் பூக்களை
        சுமந்திருந்த
எல்லோரா ஓவியமாய் - இவ்
       இளவேனிற் காலம்...!

மெருகேறியவன் மேனியின்
       தக தககப்பில்
கொடுத்தவன் பரிக்க
      வறண்டு போய்
தாகம் ஏற்றுக்கொள்ளும்
       தவிப்பாய் - இக்
கோடை காலம்...!

கார் மேகத்தின்
      கருணை - அதில்
விழுகின்ற கண்ணீரில்
      கானகமும்
செழிக்கின்ற
      கார் காலம்...!

பிரிவினை என்றாலும்
      உலகத்தின் நியதியால்
சருகுகள் பிரிகின்ற
      சத்தியத்தின்
சோதனையாய் - இவ்
      இலையுதிர் காலம்...!

அருகிலிருக்கும்
     அருகம் புல்லும்
முகம் மூடி
       ஜொலிக்கின்ற
முன் பனிக் காலம்...!

முற்றத்தில்
        வீற்றிருக்கும்
 துளசியின்
         தளிர்ச்சிக்கு
மென் பனி துவிய
         பின் பனிக் காலம்...!

No comments: