மூன்று நாள்
பெய்திருந்த மழையில்
முல்லை நிலத்தின்
வனப்பு...!
மழை வெயில்
சேர்கின்ற வேளையில்
உடல் சிலிர்க்கும்
வெண் புறாக்கள்...!
உள்ளிருந்து உதித்து
வெண்மேகத் தோணியில்
வலம் வருகின்ற
வெண்ணிலவு...!
மூவாயிரம் ஆண்டுகள்
உயிர் வாழுகின்ற - என்
தாய் மொழியான
தமிழ்...!
என்றுமே நீங்கள்
அழகுதான் - எங்கள்
இளமையென்னும்
வரையறையில்லாமல்...!
No comments:
Post a Comment