Saturday, 12 October 2013

வறையரையில்லா

மூன்று நாள்
     பெய்திருந்த மழையில்
முல்லை நிலத்தின்
     வனப்பு...!

மழை வெயில்
      சேர்கின்ற வேளையில்
உடல் சிலிர்க்கும்
      வெண் புறாக்கள்...!

உள்ளிருந்து உதித்து
      வெண்மேகத் தோணியில்
வலம் வருகின்ற
      வெண்ணிலவு...!

மூவாயிரம் ஆண்டுகள்
      உயிர் வாழுகின்ற - என்
தாய் மொழியான
      தமிழ்...!

என்றுமே நீங்கள்
      அழகுதான் - எங்கள்
இளமையென்னும்
      வரையறையில்லாமல்...!

No comments: