புதிதாய் பிறந்துவிடு
தோல்வி உன்னை
அரவணைக்கையில் - இல்லையெனில்
உலகம் உன்னை - அங்கேயே
புதைத்ததுவிடும்...!
அவநம்பிக்கையில்
வாழுகின்ற
பயணத்தை விட
நம்பிக்கையில் நடக்கின்ற
கனவுகள்
கலங்கமற்றது...!
ஏற்றுக் கொள்பவை
உறவாகட்டும்
எதிர்க்க நினைப்பவை
உடல் பிரியட்டும்
இப்பயணத்தின்
சுமை குறைத்திட...!
சுடுமணலில்
நடக்க சொல்லும்
சுற்றத்தை விட
சுதந்திரத்தின் உறவுகள்
சுகமானது...!
No comments:
Post a Comment