Saturday, 19 October 2013

சுதந்திரம்

புதிதாய் பிறந்துவிடு
       தோல்வி உன்னை
அரவணைக்கையில் - இல்லையெனில்
       உலகம் உன்னை - அங்கேயே
புதைத்ததுவிடும்...!

அவநம்பிக்கையில்
     வாழுகின்ற
பயணத்தை விட
     நம்பிக்கையில் நடக்கின்ற
கனவுகள்
     கலங்கமற்றது...!

ஏற்றுக் கொள்பவை
      உறவாகட்டும்
எதிர்க்க நினைப்பவை
      உடல் பிரியட்டும்
இப்பயணத்தின்
     சுமை குறைத்திட...!

சுடுமணலில்
      நடக்க சொல்லும்
சுற்றத்தை விட
     சுதந்திரத்தின் உறவுகள்
சுகமானது...!

No comments: