பொங்குகின்ற நீறூற்றில்
முகம் பார்க்கின்ற
வெண் புறா
வெடுக்கென நீர்
எடுத்துச் சென்ற
கருப்புருவம்...!
வில்லேந்தி ஓடிய
வேடன் - விடிகின்ற
வேளையில் கானம்
பாடி நின்ற குயில்...!
கூண்டுக்குள்ளே வைத்தாலும்
கொஞ்சு தமிழ்
பேசுகின்ற பிள்ளை
குறைவுடன் இருந்தாலும்
நிறைவினை எடுக்கின்ற
அன்னம்...!
விடியலை வரவேற்று
கொக்கரிக்கின்ற சேவல்
செவ்வானம்
சிவக்கின்ற வேலையில்
தோகை விரிக்கின்ற
மயில்...!
No comments:
Post a Comment