Wednesday, 11 September 2013

பறவைகள்

பொங்குகின்ற நீறூற்றில்
       முகம் பார்க்கின்ற
வெண் புறா
       வெடுக்கென நீர்
எடுத்துச் சென்ற
       கருப்புருவம்...!


வில்லேந்தி ஓடிய
       வேடன் - விடிகின்ற
வேளையில் கானம்
       பாடி நின்ற குயில்...!


கூண்டுக்குள்ளே வைத்தாலும்
       கொஞ்சு தமிழ்
பேசுகின்ற பிள்ளை
       குறைவுடன் இருந்தாலும்
நிறைவினை எடுக்கின்ற
       அன்னம்...!


விடியலை வரவேற்று
       கொக்கரிக்கின்ற சேவல்
செவ்வானம்
       சிவக்கின்ற வேலையில்
தோகை விரிக்கின்ற
        மயில்...!

No comments: