முழுமுகம் காட்டி
வலம் வந்த
முழு நிலவு
வழி காட்ட - அதன்
முகம் பார்த்த
மயக்கத்தில் தலை குனிந்த
அல்லி இருந்த
தாமரைக் குளம்..!
ஆலயத்தில் உச்சியில்
ஏற்றப்பட்ட விளக்கு - அதில்
அசைந்தாடிய
தீப ஒளி
வீதியெங்கும் வழங்கப்பட்ட
அன்னதானம் - அங்கே
ஆராவாரமிட்ட
மனிதக் கூட்டம்...!
பூவாடை அணிந்திருந்த
பூங்கலசமும்
பொன்னாடை அணிந்திருந்த
தெய்வத் திருமகனும்
நிலவின் அழகுடன்
போட்யிடுவதாய்
அத்தருணம்...!
Friday, 26 April 2013
Thursday, 11 April 2013
போர் வீரன்
நெஞ்சில் குத்திய
வாள் வலிப்பதில்லை
முதுகில் குத்திய
முகங்கள் மறப்பதில்லை...!
ஒரு நிமிடம் உறவாகி
மறு நிமிடம் எதிரியாகும்
சிக்கலான உறவுகளில்
வாழாது பிறந்த
மண்ணை முத்தமிட்டு
உயிர் துறக்கத்
துணிந்தவன்...!
தீவினைத் தருவதானாலும்
தரத்தினை இழக்கா
வாள் முனையை
ஏந்தி நின்று
வதைக்கின்ற
வல்லுருக்களுக்கு
விடை கொடுத்து
வீரு நடை போட்டவன்...!
களத்தில் உயிர் பிரிந்தாலும்
கண்ணிமைக்குள் காத்திருந்த
உறவுக்காக அவ்
உயிர்களின் நினைவுடன்
இறப்பவன்...!
வாள் வலிப்பதில்லை
முதுகில் குத்திய
முகங்கள் மறப்பதில்லை...!
ஒரு நிமிடம் உறவாகி
மறு நிமிடம் எதிரியாகும்
சிக்கலான உறவுகளில்
வாழாது பிறந்த
மண்ணை முத்தமிட்டு
உயிர் துறக்கத்
துணிந்தவன்...!
தீவினைத் தருவதானாலும்
தரத்தினை இழக்கா
வாள் முனையை
ஏந்தி நின்று
வதைக்கின்ற
வல்லுருக்களுக்கு
விடை கொடுத்து
வீரு நடை போட்டவன்...!
களத்தில் உயிர் பிரிந்தாலும்
கண்ணிமைக்குள் காத்திருந்த
உறவுக்காக அவ்
உயிர்களின் நினைவுடன்
இறப்பவன்...!
Saturday, 6 April 2013
விளங்கும்
பிறந்த நாளிளே
இறந்தாலும்
இறகுகள் வலிக்க
பறந்து பறந்து
வாழ் நாளை
வசந்தமாக்கும்
மே பூச்சி...!
உடல் தாங்கும்
இறகின்றியும்
இயற்க்கை
அமிர்தம் படைக்கும்
தேனீக்களின் படை...!
சிறு சிறு உருவமாய்
சிதையாத உறவுகளில்
சித்தெறும்பு
சிறுவளைக்குள்
சேர்த்து வைத்த
சிறப்பியல்பு...!
தவறி கீழே
விழுந்தாலும்
தன்னம்பிக்கையில்
தன்னியல்புக்கு
திரும்புகின்ற
சிலந்தி...!
வாழ்வதற்க்கு பலம் பெற
கூட்டுக்குள் வாழ்ந்தாலும்
ஊண்மையான சுதந்திரத்தில்
சுற்றித் திரிகின்ற
பட்டாம் பூச்சி...!
சிறு சிறு ஜிவனும்
சந்தோசத்தின்
வழி காட்டியாய்
மதிக்கின்ற அன்பினில்
மறக்க வேண்டிய
விரோதத்தை...!
இறந்தாலும்
இறகுகள் வலிக்க
பறந்து பறந்து
வாழ் நாளை
வசந்தமாக்கும்
மே பூச்சி...!
உடல் தாங்கும்
இறகின்றியும்
இயற்க்கை
அமிர்தம் படைக்கும்
தேனீக்களின் படை...!
சிறு சிறு உருவமாய்
சிதையாத உறவுகளில்
சித்தெறும்பு
சிறுவளைக்குள்
சேர்த்து வைத்த
சிறப்பியல்பு...!
தவறி கீழே
விழுந்தாலும்
தன்னம்பிக்கையில்
தன்னியல்புக்கு
திரும்புகின்ற
சிலந்தி...!
வாழ்வதற்க்கு பலம் பெற
கூட்டுக்குள் வாழ்ந்தாலும்
ஊண்மையான சுதந்திரத்தில்
சுற்றித் திரிகின்ற
பட்டாம் பூச்சி...!
சிறு சிறு ஜிவனும்
சந்தோசத்தின்
வழி காட்டியாய்
மதிக்கின்ற அன்பினில்
மறக்க வேண்டிய
விரோதத்தை...!
Friday, 5 April 2013
அன்பு
கேட்டு கிடைப்பதில்லை
கிடைத்ததற்க்கு கேட்பதில்லை
ஒவ்வொறு ஊனுக்குள்ளும்
உடைமைகளைத் தாண்டி
உணர்வுகள் தேடுகின்ற
உன்னத மருந்து...!
இது இருக்குமிடம்
தவறு நடப்பதில்லை
இல்லாதிடத்து தவறுகள்
இல்லாமல் இருப்பதில்லை
சந்தோசம்
இருப்பதற்க்கும்
இறப்பதற்க்கும்
நிஜமான காரணி...!
அன்னையிடம் கிடைக்கின்ற
எதிர் பார்க்கா அன்பு
நண்பர்களிடம் பெறுகிற
எதார்த்த அன்பு
துனைவியிடம் தரப்பட்ட
பகிர்கிற அன்பு
குழந்தைகளிடம் குடிகொண்ட
அக்கறையான அன்பு - என
அன்பின் உருவம்
மாறினாலும் மனிதம்
மறுக்காமல்
ஏற்க்க நினைக்கிற
நிலயான ஆதாரம்...!
கிடைத்ததற்க்கு கேட்பதில்லை
ஒவ்வொறு ஊனுக்குள்ளும்
உடைமைகளைத் தாண்டி
உணர்வுகள் தேடுகின்ற
உன்னத மருந்து...!
இது இருக்குமிடம்
தவறு நடப்பதில்லை
இல்லாதிடத்து தவறுகள்
இல்லாமல் இருப்பதில்லை
சந்தோசம்
இருப்பதற்க்கும்
இறப்பதற்க்கும்
நிஜமான காரணி...!
அன்னையிடம் கிடைக்கின்ற
எதிர் பார்க்கா அன்பு
நண்பர்களிடம் பெறுகிற
எதார்த்த அன்பு
துனைவியிடம் தரப்பட்ட
பகிர்கிற அன்பு
குழந்தைகளிடம் குடிகொண்ட
அக்கறையான அன்பு - என
அன்பின் உருவம்
மாறினாலும் மனிதம்
மறுக்காமல்
ஏற்க்க நினைக்கிற
நிலயான ஆதாரம்...!
Friday, 29 March 2013
அடிமையா அவன்?
உயிர் பாதி இழந்தாலும்
உறவுகள் வாழ
ஊருக்கு வெளியே
உதிரம் கரைத்தவனின்
உடல் மட்டும்
ஊர் வந்து சேர்ந்தது
மண்ணின்
உடைமையென...!
வல்லுருவின்
வலிமையில்
அனுப்பி வைத்த
சவப் பெட்டிக்குள்
அடையாலம் காட்டிய
தாயின் துயர ரேகைகள்...!
கருணையில்லா
புகுந்த மண்ணும்
கண்டு கொள்ளா
பிறந்த மண்ணும்
நீதி கேட்காமல்
நிதியனுப்பியது - அவன்
அடக்க
சடங்கிற்க்கு...!
தினம் தினம் சரிகிற
சவப் பெட்டி குறையுமோ?
கொன்று குவித்த
கொடுமையையும்
ஆதாயமாக்குகிற
குறை மனதுடையவர்களால்...!
உறவுகள் வாழ
ஊருக்கு வெளியே
உதிரம் கரைத்தவனின்
உடல் மட்டும்
ஊர் வந்து சேர்ந்தது
மண்ணின்
உடைமையென...!
வல்லுருவின்
வலிமையில்
அனுப்பி வைத்த
சவப் பெட்டிக்குள்
அடையாலம் காட்டிய
தாயின் துயர ரேகைகள்...!
கருணையில்லா
புகுந்த மண்ணும்
கண்டு கொள்ளா
பிறந்த மண்ணும்
நீதி கேட்காமல்
நிதியனுப்பியது - அவன்
அடக்க
சடங்கிற்க்கு...!
தினம் தினம் சரிகிற
சவப் பெட்டி குறையுமோ?
கொன்று குவித்த
கொடுமையையும்
ஆதாயமாக்குகிற
குறை மனதுடையவர்களால்...!
Subscribe to:
Posts (Atom)