நாடி பிடித்து பார்க்கா
நாசிக்குள் நுழைக்கின்ற
சுவாசக்காற்றாய்
உறவுகள்...!
உண்மையாகும் போது
உயிர் வாழும்
உடல் நரம்பில் கலந்துவிட்ட
மூச்சுக் காற்றாய்...!
மூழ்கிப் போகையில்
உருத்துவிட்ட வலியில்
தொட்டுவிட்ட மென்மையால்
துரத்தியடிக்கப் பட்ட
தும்மல் காற்றாய்...!
Friday, 25 January 2013
Friday, 18 January 2013
குளக்கரை
மிதக்கின்ற தாமரை
சூழ்ந்து அலங்கரிக்கின்ற
அல்லிப் பூக்கள்...!
வீசுகின்ற திசையறியா
குழம்பிய குழப்பத்தில்
கரைத்தொடுகின்ற அலைகள்...!
விழுகின்ற ஒளிக்கதிரில்
உருவத்தின்
ஒடிந்த தோற்றம்...!
களிமண் சேற்றில்
பிஞ்சு தடங்களின்
கலையுருவம்...!
தனிமை என்றாலும்
தயங்காது உதவுகின்ற
சலவைக் கல்...!
கரையோர நீர்வலத்தில்
நீண்டு தலை குனிந்த
நெற்க்கதிர்கள்...!
ஊஞ்சல் கொண்டு
தாலாட்டிய
ஆலம் விழுதுகள்...!
வனத்திற்க்கு வனப்பூட்டும்
வண்ண வண்ணப் பறவைகளும்
நிஜமான ஆதாரமென
நீந்துகின்ற உயிரினத்தின்
நிஜ உலகமும்...!
சூழ்ந்து அலங்கரிக்கின்ற
அல்லிப் பூக்கள்...!
வீசுகின்ற திசையறியா
குழம்பிய குழப்பத்தில்
கரைத்தொடுகின்ற அலைகள்...!
விழுகின்ற ஒளிக்கதிரில்
உருவத்தின்
ஒடிந்த தோற்றம்...!
களிமண் சேற்றில்
பிஞ்சு தடங்களின்
கலையுருவம்...!
தனிமை என்றாலும்
தயங்காது உதவுகின்ற
சலவைக் கல்...!
கரையோர நீர்வலத்தில்
நீண்டு தலை குனிந்த
நெற்க்கதிர்கள்...!
ஊஞ்சல் கொண்டு
தாலாட்டிய
ஆலம் விழுதுகள்...!
வனத்திற்க்கு வனப்பூட்டும்
வண்ண வண்ணப் பறவைகளும்
நிஜமான ஆதாரமென
நீந்துகின்ற உயிரினத்தின்
நிஜ உலகமும்...!
Saturday, 5 January 2013
புகலிடம்
சந்தோசத்தின்
சிதறலை மட்டும்
சித்திரங்களாய்
சேர்க்கத் தெரிந்த
சிந்தனை...!
வாழ்வில் வதைப்பட்ட
வன் மனத்தை
வருடுகின்ற
வானவில்...!
தடுமாறி விழுகையில்
தாங்கி பிடித்து
தாலாட்ட - தயங்காத
தாய் மடி...!
வசந்தமானாலும்
வருத்தமானாலும்
வண்ணப்பறவைகளின்
விருப்பமான
வேடந்தாங்களாய்
இப்புகலிடம்...!
சிதறலை மட்டும்
சித்திரங்களாய்
சேர்க்கத் தெரிந்த
சிந்தனை...!
வாழ்வில் வதைப்பட்ட
வன் மனத்தை
வருடுகின்ற
வானவில்...!
தடுமாறி விழுகையில்
தாங்கி பிடித்து
தாலாட்ட - தயங்காத
தாய் மடி...!
வசந்தமானாலும்
வருத்தமானாலும்
வண்ணப்பறவைகளின்
விருப்பமான
வேடந்தாங்களாய்
இப்புகலிடம்...!
Friday, 28 December 2012
கிருஸ்துமஸ்
திகைக்கின்ற இருட்டுக்குள்
தீமைகள் பரவியிருக்க
வாழ்விற்க்கு வழிகாட்டும்
ஒளி பிறந்த நன்நாள்...!
கண்-பார்வை குறைபாட்டினில்
கலங்கிய கன்னித்தாயினுடைய
கலக்கங்கள் கரைந்த
காலைப் பொழுதினில்...!
தேவதைகள் வழி காட்ட
தொழுவத்தில் பிறந்தாலும்
திளைக்கின்ற ஆனந்தத்தில்
அறிமுகப் படுத்தப்பட்ட
நாயகன்...!
சிலுவையில் அறையப்பட்டாலும்
அடிமை அல்ல
ஆணைக்கு அடி பணியா
ஆருயிர்க் காவலன்...!
அன்பினில் வாழ்ந்து
இருள் விலக - அன்றே
ஆலயத்தில் ஏற்றப்பட்ட
அகல் விளக்கு...!
தீமைகள் பரவியிருக்க
வாழ்விற்க்கு வழிகாட்டும்
ஒளி பிறந்த நன்நாள்...!
கண்-பார்வை குறைபாட்டினில்
கலங்கிய கன்னித்தாயினுடைய
கலக்கங்கள் கரைந்த
காலைப் பொழுதினில்...!
தேவதைகள் வழி காட்ட
தொழுவத்தில் பிறந்தாலும்
திளைக்கின்ற ஆனந்தத்தில்
அறிமுகப் படுத்தப்பட்ட
நாயகன்...!
சிலுவையில் அறையப்பட்டாலும்
அடிமை அல்ல
ஆணைக்கு அடி பணியா
ஆருயிர்க் காவலன்...!
அன்பினில் வாழ்ந்து
இருள் விலக - அன்றே
ஆலயத்தில் ஏற்றப்பட்ட
அகல் விளக்கு...!
Friday, 21 December 2012
நீரோடை
நீரின் சல சலப்பில்
சிதறுகின்ற அமைதி
மெல்ல மெல்ல கரை
தொட்டு செல்லும்
அன்பினில் - தன்னையே
அற்ப்பனிக்கின்ற
அணைக் கரைகள்...!
ஓடுகின்ற நீரின்
ஓட்டத்தில்
ஒட்டி வாழாமல்
துரம் குறைக்க
துள்ளிக் குதிக்கின்ற
மீன்களின் ஆராவாரம்...!
எங்கோ பிறிந்த
நினைவுகளில்
நீண்ட துரம் கடந்து
கலக்கின்ற நொடிப் பொழுதினில்
கிளை நதிகளின்
கிறுக்கள் மொழிகள்...!
நள்ளிரவில்
நிலவு பயணிக்கின்ற
பல்லக்காகி நம்
பார்வையில் படர்கின்ற
பசுமையின் பிறப்பிடம்...!
சிதறுகின்ற அமைதி
மெல்ல மெல்ல கரை
தொட்டு செல்லும்
அன்பினில் - தன்னையே
அற்ப்பனிக்கின்ற
அணைக் கரைகள்...!
ஓடுகின்ற நீரின்
ஓட்டத்தில்
ஒட்டி வாழாமல்
துரம் குறைக்க
துள்ளிக் குதிக்கின்ற
மீன்களின் ஆராவாரம்...!
எங்கோ பிறிந்த
நினைவுகளில்
நீண்ட துரம் கடந்து
கலக்கின்ற நொடிப் பொழுதினில்
கிளை நதிகளின்
கிறுக்கள் மொழிகள்...!
நள்ளிரவில்
நிலவு பயணிக்கின்ற
பல்லக்காகி நம்
பார்வையில் படர்கின்ற
பசுமையின் பிறப்பிடம்...!
Subscribe to:
Posts (Atom)