மிதக்கின்ற தாமரை
சூழ்ந்து அலங்கரிக்கின்ற
அல்லிப் பூக்கள்...!
வீசுகின்ற திசையறியா
குழம்பிய குழப்பத்தில்
கரைத்தொடுகின்ற அலைகள்...!
விழுகின்ற ஒளிக்கதிரில்
உருவத்தின்
ஒடிந்த தோற்றம்...!
களிமண் சேற்றில்
பிஞ்சு தடங்களின்
கலையுருவம்...!
தனிமை என்றாலும்
தயங்காது உதவுகின்ற
சலவைக் கல்...!
கரையோர நீர்வலத்தில்
நீண்டு தலை குனிந்த
நெற்க்கதிர்கள்...!
ஊஞ்சல் கொண்டு
தாலாட்டிய
ஆலம் விழுதுகள்...!
வனத்திற்க்கு வனப்பூட்டும்
வண்ண வண்ணப் பறவைகளும்
நிஜமான ஆதாரமென
நீந்துகின்ற உயிரினத்தின்
நிஜ உலகமும்...!
No comments:
Post a Comment