சந்தோசத்தின்
சிதறலை மட்டும்
சித்திரங்களாய்
சேர்க்கத் தெரிந்த
சிந்தனை...!
வாழ்வில் வதைப்பட்ட
வன் மனத்தை
வருடுகின்ற
வானவில்...!
தடுமாறி விழுகையில்
தாங்கி பிடித்து
தாலாட்ட - தயங்காத
தாய் மடி...!
வசந்தமானாலும்
வருத்தமானாலும்
வண்ணப்பறவைகளின்
விருப்பமான
வேடந்தாங்களாய்
இப்புகலிடம்...!
No comments:
Post a Comment