Saturday, 5 January 2013

புகலிடம்

சந்தோசத்தின்
        சிதறலை மட்டும்
சித்திரங்களாய்
        சேர்க்கத் தெரிந்த
சிந்தனை...!

வாழ்வில் வதைப்பட்ட
       வன் மனத்தை
வருடுகின்ற
        வானவில்...!

தடுமாறி விழுகையில்
        தாங்கி பிடித்து
தாலாட்ட - தயங்காத
        தாய் மடி...!

 வசந்தமானாலும்
        வருத்தமானாலும்
வண்ணப்பறவைகளின்
        விருப்பமான
வேடந்தாங்களாய்
           இப்புகலிடம்...!

No comments: