நாடி பிடித்து பார்க்கா
நாசிக்குள் நுழைக்கின்ற
சுவாசக்காற்றாய்
உறவுகள்...!
உண்மையாகும் போது
உயிர் வாழும்
உடல் நரம்பில் கலந்துவிட்ட
மூச்சுக் காற்றாய்...!
மூழ்கிப் போகையில்
உருத்துவிட்ட வலியில்
தொட்டுவிட்ட மென்மையால்
துரத்தியடிக்கப் பட்ட
தும்மல் காற்றாய்...!
No comments:
Post a Comment