அரை முற்றத்தில்
முழு முகம் காட்டும்
வெண்ணிலவு - அதன்
அழகின் மயக்கத்தில்
முத்தமிட்டுச் செல்லும்
இரும்புப் பறவை...!
வானத்தின் வனப்பில்
வட்டமிட்டு இறகடித்துப்
பறக்கும் புறாக்கள் - அதன்
இறகில் குடிகொண்டு
வாழத் துடித்து
படபடக்கின்ற கண்ணிமைகள்...!
வீதியெங்கும் விட்டுவிட்டு
எரிகின்ற மின்விளக்கு
போட்டியிட்டு விழி திறக்கின்ற
விண்மீன் கூட்டம்...!
No comments:
Post a Comment