Sunday, 6 November 2011

அன்னை

பாதி வயிறு பசித்திருந்தாலும்
    அவள் பாலூட்ட மறந்ததில்லை......

அழுக்கான ஆடைகளை
    அழகென உடுத்தியிருந்தாலும் நம்
ஆடைகளை சலவை செய்ய மறந்ததில்லை.....

வாழ்வின் மரபினையும்
    கழற்றி வாழ்ந்தவள் நம்
வாழ்வில் மாற்றம் வர....

அவள் கை ஒரு பிடி சோறும் அமிர்தம்
    அக்கலங்கமற்ற அன்பு கலப்பதால்......

Saturday, 5 November 2011

நன்றி


வாழ்வின் வலிமையில் வலிகளை எண்ணிக்கொண்டிருந்தவன் சந்தோச நிமிடங்களை சேகரிக்க தொடங்கினான்.........


கருவிழிக்குள் கண்ணீரும்
      கண்ணீரின் கருவறையான
வடுக்களை சுமந்தவனின்
     இதயத்தில் புதைந்திருந்த
சிறகுகளை விரிய வைத்த
    அந்த இருவிழிப்பார்வைக்கு....

Sunday, 30 October 2011

உணர்தல்

புதிதாய் பூத்த
     பனிப்பூ கூரிற்று
ஒரு நாளின் உன்னதத்தை...

கூட்டுக்குள் வாழ்ந்த
    கூட்டுப்புழு காட்டிற்று
வலிதான் வெற்றியின் ரகசியமென்று.....

முட்டிமுட்டி முலைக்கின்ற
    விதைகள் விளக்கின விதியையும்
மாற்றுகின்ற மகத்துவும்
    முயர்ச்சிக்கு இருக்கின்றதென்று....

பறந்து திரிகின்ற
    பட்டாம் பூச்சி பரப்பியது
சுதந்திரம் எத்தனை பரவசமென்று.....

கல்லறைகள் கூரின
   வாழ்வில் ஏற்றத் தாழ்வு வேண்டாமென்று....

இப்படி
      இயற்க்கை இயல்பாய்
அம்பலம் ஆக்கின
      வாழ்வின் ரகசியத்தை......


Friday, 28 October 2011

காதல்


நிலையற்ற வாழ்வில்
     நிலையான சந்தோசத்தை
நினைவில் நிருத்துகின்ற
    நிபந்தனையற்ற அன்பு...!

உண்மையில் இது
    உலகின் உன்னதம் தான்
உண்மையான உணர்வுகளி ல்
    வாழ்கின்ற வாழ்வை
திரும்பப் பெறுகையில்...!


Thursday, 27 October 2011

மாசுருதல்

மானுடம் வாழ
       மண்ணை மலையாய் பிளந்தது மண்புழு
மௌனமாய் மரணமுற
      முனைப்புடன் தெளித்தான்
மண்ணுயிர்க்கொல்லியை.....

கறையில்லா காசியில்
      புனிதமாய் விளங்கியது கங்கை
தொழிலென தோலைக் கழுவி
     தூரத்தில் விட்டான் அதன் துரைதனில்
கருவூண் வாழா கல்லறையாகிறது
       தினம் தினம் .....

ஒவ்வொரு உயிரும் ஓங்கி தழைக்க
    ஓடாய் நின்றது ஓசோன் படலம் அதன்
ஓரமாய் கணக்காய் கரியை கலந்து
    காத்து நின்ற காவலனின்
கருணையை கரைத்துப் பார்க்கிறோம்
    தினம் தினம்.....


பூமித்தாயின் வயிற்றில்
    குண்டினை வைத்து - தாயின்
கற்பம் கலைக்கும் கல்வனே
    காலதச்சனின் மாற்றத்திற்க்கு ஏற்ப
நீ மாறாவிட்டால் பூமிப்பந்து
    பாதகப் பொருளாய்
போகியில் போட்டெரிக்கப்படும்....