Saturday, 22 October 2011

உணரப்படா உழவு

தினமும் வியர்வைத்துளியால்
      வேகாத உடலும்
விதைக்காத
     விதை நெல்லும் முளைத்துவிட....

கானகத்தில் கலம் நின்று
     கருத்துவிட்ட கருணை உள்ளத்தின்
விலா எலும்பும் தோய்வுற்று
    தொல்லை கொடுக்க
கடுகடுக்கும் கால்களால்
     சேருமிதித்து நட்டுவிட்ட நாத்துகளும்
நா லுனாள் பெய்த மழையில்
     நலிந்து விட...

நடை தளர்ந்த காளை மாடும்
     கடும் உழைப்பில் களைப்பாற
காலமில்லாது களமிறங்கி
     பயர் வகையை விதைத்த பின்னும்
விதி விட்ட பாடில்லை
   விளையாடிய கார்மேகம் விரயம் செய்ய
ஒன்றிரண்டு செடிகல் ஓரமாய்...


பூ பூத்து காய்காக்க
     களைப்பறித்து கண்ணில் காத்து
அறுத்துவிட்ட அறுவடை நாளில்
     அறுவர் கொண்ட படை அதன்
தரம் பார்க்க தரிகெட்டு நின்றவனாய்...

தரணியில் தானாய் வாழத்
      தகுதி பெற்றவன் தடுமாறும்
தாறுமாறு உலகம்...

ஊருக்கே உணவலிக்கும்
      உழவனுக்கு உழுதுவிட்ட சேரும்
மட்டும்தான் மிச்சமோ
     சோருகூட எச்சமோ....

Monday, 17 October 2011

அநாதை

அன்னையின் அன்பு உனக்கு
     அர்த்தமற்றது அவளின்
அரவணைப்பு உனக்கு
      நிழல்களில் மட்டும் - அனால்
உண்மையான உள்ளுணர்வு கொண்ட
      உன்னத மனிதர்கள் மட்டும்
உந்தன் சொந்தமாய்......

எவருக்கும் அமைவதில்லை
      அத்தனை உண்மையான உறவுகள்
எங்களைத் தாலாட்டுகின்ற
       தாய்மடியைத் தவிர......

Sunday, 9 October 2011

கும்பகோணம் தீ விபத்து [16/07/04]

விடியலை உதயம் செய்ய
        உதிக்கின்ற சூரியனே
உன்னிலான இயக்கம் அன்று
       இயங்காமல் இருந்திருக்கலாம்...!

மனித இயக்கதை
      சீரமைக்கும் கடிகார முள்ளே
உந்தன் அசைவு அன்று
     அசைவின்றி இருந்திருக்கலாம்...!

கல்விக் கடல் கரையானதால்
      ஆசைகள் பலமானதால்
கவனம் கரைபுரண்டு
       கல்விக்கண் திறக்க வந்த கல்மனத்தார்
தன் உயிர் காத்து பறந்ததால்...!

எத்தனையோ
      அடையாலம் தெரியா ஸ்பரிசங்கள்
வடுக்களாய் நம்மில் அந்த
       அடையாலம் தெரியா
கொடும் தீயால்...!


Thursday, 29 September 2011

வெளிச்சம்


பகல் இறக்கின்ற
      பொழுதில்
வெண்ணிலவின்
      பிறை நெற்றி மட்டும்
தன்னந்தனியாய்....

கன நாழிகையில்
      கருப்பு தேவதைகள்
தங்கள் வெற்றியில்
      கூச்சலிடுவதாய் எங்கும்
கருப்புத்திரை மட்டும்....

நான் எரியூட்டிய
      சிறு தீபம் மட்டும்
ஆற்றலுடன்
      வெண்மை நிரப்பியது - அந்த
வெளுத்துப் போன
      இருட்டுக்குள்...

Friday, 23 September 2011

தென்றலின் தேடல்

தேடி வந்த தென்றல்
        தேகத்தில் பட்டு
திசையெங்கும் பரவிற்று...

மனித மன நேசத்தை
         அறிய வந்து
பாசவலை அருந்துபோய்
         மழலைச் சிரிப்பினில்
புகுந்தது
          உலகத்தின் கலகமற்றதென
அமைதியை தேடி....