Sunday, 9 October 2011

கும்பகோணம் தீ விபத்து [16/07/04]

விடியலை உதயம் செய்ய
        உதிக்கின்ற சூரியனே
உன்னிலான இயக்கம் அன்று
       இயங்காமல் இருந்திருக்கலாம்...!

மனித இயக்கதை
      சீரமைக்கும் கடிகார முள்ளே
உந்தன் அசைவு அன்று
     அசைவின்றி இருந்திருக்கலாம்...!

கல்விக் கடல் கரையானதால்
      ஆசைகள் பலமானதால்
கவனம் கரைபுரண்டு
       கல்விக்கண் திறக்க வந்த கல்மனத்தார்
தன் உயிர் காத்து பறந்ததால்...!

எத்தனையோ
      அடையாலம் தெரியா ஸ்பரிசங்கள்
வடுக்களாய் நம்மில் அந்த
       அடையாலம் தெரியா
கொடும் தீயால்...!


Thursday, 29 September 2011

வெளிச்சம்


பகல் இறக்கின்ற
      பொழுதில்
வெண்ணிலவின்
      பிறை நெற்றி மட்டும்
தன்னந்தனியாய்....

கன நாழிகையில்
      கருப்பு தேவதைகள்
தங்கள் வெற்றியில்
      கூச்சலிடுவதாய் எங்கும்
கருப்புத்திரை மட்டும்....

நான் எரியூட்டிய
      சிறு தீபம் மட்டும்
ஆற்றலுடன்
      வெண்மை நிரப்பியது - அந்த
வெளுத்துப் போன
      இருட்டுக்குள்...

Friday, 23 September 2011

தென்றலின் தேடல்

தேடி வந்த தென்றல்
        தேகத்தில் பட்டு
திசையெங்கும் பரவிற்று...

மனித மன நேசத்தை
         அறிய வந்து
பாசவலை அருந்துபோய்
         மழலைச் சிரிப்பினில்
புகுந்தது
          உலகத்தின் கலகமற்றதென
அமைதியை தேடி....

Tuesday, 20 September 2011

மனித இனம்


பூமியில் பூத்த
        புதுமலர்கள்
வாடிய வற்றல்
        வண்ணத்துப்பூச்சியின்
சிறகொடிந்த காலம்...

இல்வாழ்வில் இணைந்த
        இருமனப் பூக்கள்
கருகிய மேடை - நம்
        கருவினில் கலைந்த
கற்பத்தின் சிதை காலம்....

கரையோர கற்பக பூக்கள்
        கருவையில்
கலைந்து கிடந்தது நம்
        கன்னத்தின் கருகிய பாகத்தின்
உருக்களின் காலம்....

தொடர் மழையின்
          தோன்றலில்
தொலைந்து போன
          தோகையினை தேடி
இந்த தோகை மயில்கள்....

தன் இனத்தின்
         தடங்களை காக்க முடியாதவன்
அலைகிறான்
         வேற்று கிரகத்தில்
உயிர் வாழும் ரகசியம் தேடி....


Thursday, 15 September 2011

நட்பு

சந்தோச நிமிடங்கலில்
      நம்முடன் இருந்து
வாழ்வின் சரிவு நேரத்தில்
      பிரிகின்ற கண்ணீரல்ல நட்பு - அது
நாசிக்குள் நுழையும்
      மூச்சிக்காற்றாய் நம்
நரம்புத் துடிப்பின்
      ஒவ்வொரு அசைவிலும்
உறைந்திருப்பது...