Monday, 5 September 2011

தனித்துவம்

மண் சேற்றில்
      மனம் தரும்
தாமரை....

பருக்கை காட்டில்
    பழம் தரும்
பேரிச்சை....

ஊர்வலத்தில்
   மிதிபடும்
பூக்கள்....

தென்னங்குலையில்
   தெரித்த
தேங்காய்....

இவையெல்லாம்
    கனலுக்குள் வழ்ந்தாலும்
கண்ணீரில் நடந்தாலும்
    சந்தோஷத்தை
மட்டுமே கொடுத்து
    வாழ்வன.....

Thursday, 1 September 2011

பூவும் மனிதமும்

சவ ஊர்வலத்தில்
          அழுகும் பிணம் நாங்கள்-நீயோ
காதல் தோற்றத்தின் காலச்சுவடாய்
          காலப்பதிவேட்டின்  நடுவில் இன்றும்....

கண்டவுடன் கடந்த காலக்  கனவிற்கு
         கொண்டு செல்லும் கருவறையாய்
எங்கள்  சுக துக்கங்களை
         சுமந்து கொண்டு....


Monday, 22 August 2011

உண்மை உறவு


பின்னாளில்
    உதவுவானா அண்ணன்...

நல்லா இருந்தால்
    பெருமை பேசிக்கொள்ள அப்பா...

தேவைகளை
    அடுக்கி கொண்டுவரும் அக்கா...

கீழே விழுந்தாலும்
    எழுந்து வர தோள் கொடுத்து
வாழ்வின் அரைக்காலம்
    கடக்க வாழ்த்தி
வாழ்கின்ற தெய்வமாய் தாய்....


Thursday, 18 August 2011

அழகு

தலையசைத்து
        தென்றலை வரவேர்க்கும்
தென்னையின் கீற்று...

வானத்தில் வலம்வரும்
         சூரியனின் கதிர் வீச்சில
 தலை குனியும் நெற்கதிர்கள்...

முகம் கட்டாது - 
        மனம் மயங்கும் குரலில்
 பாடும் குயில்...

மனம் சருக்கும்
       சந்தத்துடன்
ஓடுகின்ற ஓடை...

கொஞ்சும் குரல் காட்டி - மனம்
         கொள்ளை கொள்ளும் கிளி...

மென்மையான இறகில்
        வன்மனம் கரைக்கும்
வெண் புறா...

பனித்துளியுடன் பிறந்த
   புதுப் பூ...

இவையெல்லம்
      உண்மையான அழகாய்
 உலகத்தின் உலைக்கலம்
      இயங்கும் வரை...


Friday, 12 August 2011

முயற்சி

எத்தனையோ மனிதர்களின்
       தோற்று விழுந்த படிக்கட்டில்தான்
எவரஸ்ட் சிகரம் தொட்ட
       டென்சிங்கின் வெற்றி...

முயற்சியற்ற முடவனாய்
        மண்ணுக்குள் புதைவதை விட
முயற்சித்த பின் தோற்றாலும்
        வெற்றியின் படிக்கட்டாக ஆசைப்படுவது...