மின்னல் கீற்று
வானம் கிழித்து அம்
மலை முகடுகளில்
மறைந்தது...!
மிதமாய்
பொழிந்த மழை
திசை மாறி
பேய் மழையாய்
மெய் சிலிர்க்கச்
செய்தது... !
தறிகெட்டு படிகளில்
உருண்டு வந்த
தகரம் போல்
தாறுமாறாய்
ஒலி எழுப்பி
உள்ளம் உறையவைத்து
மறைந்த விட்ட
இடி முழக்கம்... !
கனத்த குரலில்
கரைந்தபடி கூடுகளை
தேடிச்சென்ற
காக்கை கூட்டம்..!
கரையோரம் முறிந்து
விழுந்திருந்த
எருக்கம்
பூக்கள்... !
ஆற்றுப்படுத்த
யாருமில்லையென்ற
தொனியில்
மீண்டும் மீண்டும்
கரையை மோதிச்
சென்ற அலைகள்...!
இரையைத்
தேடி தேடி
இறகு வலிக்க
பறந்து திரிந்த
கொக்குகள்...!
கொக்குகள்...!
பாதி மூழ்கி
மீதியில்
மூச்சுவிடும்
சலவைக் கல்...!
முறிந்த கிளையுடனும்
சருகாய் - தரையில்
விரிந்த
கனிகளுடன்
கண்ணில் பதிந்த - அக்
கரையின் காவலனாய்
தலைமுறை கடந்த
ஆலமரம்...!