அங்கே
ஆருயிர் துறக்கும்
அன்பு நெஞ்சங்கள்...!
மனிதமில்லா
கூட்டம் இங்கே
மனிதப்
பாதுகாவலனாய்...!
கண்களில் எரியும்
நெருப்புடன்
ஆக்கிரமிப்பை
விலக்கிக்கொள்ள
ஆணையிடும்
அணிவகுப்பு...!
கலந்துவிட்ட
கலப்பினில்
கண்ணிமையும்
கரையானாகிவிட
வழிகின்ற
கண்ணீர் துளிகள்..!
நடுங்கும் குளிரிலும்
நொடியினில் மறையும்
நடைபாதை சூழலில்
ஆயுதம் ஏந்தும்
தேசபக்தி...!
நட்பினில்
கைகோர்க்க வேண்டிய
கரங்கள் - இன்று
நலிந்தவர்களை
நசுக்குகின்ற
நடைமுறையில்..!
எதை இழந்தாலும்
மனிதமிங்கே
வாழவேண்டுமென்ற
நிலைமாறி...!
எதை இழந்தேனும்
செல்வம் சூழ
வாழ வேண்டுமென்று
பயணிக்கின்றோம் ...!
No comments:
Post a Comment