இலை கொடிகளுக்கு
உயிர் கொடுத்த
மழைத்துளிகள்
மெல்ல மெல்ல அதன்
சலசலப்பை கூட்டி சென்ற
தென்றல் காற்று...!
கூடுகள் தோறும்
பிஞ்சிப் பறவைகளின்
கீச்சுக் குரல்
இரைதேடச்செல்லும்
தாய் பறவையின்
பிரிவு தாளாமல்...!
கண்ணுக்கு தெரியாத
விஷக்கிருமியில்
காற்றும் விஷமாகும்
வருத்தத்தில்
மனித இனம்
பயந்து கிடக்க...!
வாழ்வு என்று முடியும்
வருத்தமில்லா
தோரணையில்
இயற்கை மட்டும் - தன்
இயல்பு மாறாது
மாறிக்கொண்டிருக்கிறது...!
வாழத் தெரியாத
வழித்தடத்தில்
மனித இனம்
வதை பட்டிருக்க
எத்தனையோ
யுகங்கள் கடந்த
பட்டறிவுதான்
உந்தன் சாந்த
சாம்ராஜ்ஜியத்தின்
வெளிப்பாடோ...!
No comments:
Post a Comment