Friday, 22 May 2020

வழித்தடம்

பூத்த மலர்கள்
        கனத்த காற்றின்
வலிமையில்
       வழியெங்கும்
சிதறிக்கிடக்க...!

காலைப் பொழுதின்
        புத்துணர்ச்சியில்
கீச்சுக்குரல் இட்டு
        இங்கும் அங்கும்
ஓடித்திரிந்த
        அணில் பிள்ளை...!

மென் பனி
        விலகி
கதிரவன்
         மென் ஒளியை
கிரகித்து
        புன்முறுவல் பூத்த
இலைகளின்
        புதுவரவு...!

மின்னுகின்ற
       வழித்தடத்தில்
வரிசையாய்
       வந்து நின்ற
மகிழ்வுந்துகளும் அதன்
       முன்விளக்கு
ஒளி பட்டு
       பிரதிபலித்த
நல்வரவு
        வாசகமும்...!

No comments: