Saturday, 9 May 2020

ராஜ ராஜ சோழன்

கடல்  கடந்தும்
     தன் கொடி 
நிலைநாட்டிய
     போர்  வாள்...!

அன்புக்காக
     அரியணை 
துறந்த
      இளம்  துறவி..!

எம் மதமும்  
     சம்மதமென
வாழ்ந்து  சென்ற
    வள்ளல்..!

நட்புக்காக  தன்
      உயிரையும்
துச்சமென
      நினைத்த சமுத்ரா
தேவியின்  மகன் ...!

வறுமையின்றியும்
       வான்முட்டும்
கோபுரமைத்த
       உலக விந்தை ...!

மக்கள்
        மனதிலும் தன் 
தாய் தந்தையர்  
       இருதயத்திலும்
நீங்காமல் நிலைத்திருந்த
       கோமகன்..!

தரணியின்
      பொற்காலம்  தோன்ற
அப்பொன்னி தேவியே
        உயிர்  கொடுத்த
தவப் புதல்வன் ...!

No comments: