Sunday, 30 October 2011

உணர்தல்

புதிதாய் பூத்த
     பனிப்பூ கூரிற்று
ஒரு நாளின் உன்னதத்தை...

கூட்டுக்குள் வாழ்ந்த
    கூட்டுப்புழு காட்டிற்று
வலிதான் வெற்றியின் ரகசியமென்று.....

முட்டிமுட்டி முலைக்கின்ற
    விதைகள் விளக்கின விதியையும்
மாற்றுகின்ற மகத்துவும்
    முயர்ச்சிக்கு இருக்கின்றதென்று....

பறந்து திரிகின்ற
    பட்டாம் பூச்சி பரப்பியது
சுதந்திரம் எத்தனை பரவசமென்று.....

கல்லறைகள் கூரின
   வாழ்வில் ஏற்றத் தாழ்வு வேண்டாமென்று....

இப்படி
      இயற்க்கை இயல்பாய்
அம்பலம் ஆக்கின
      வாழ்வின் ரகசியத்தை......


Friday, 28 October 2011

காதல்


நிலையற்ற வாழ்வில்
     நிலையான சந்தோசத்தை
நினைவில் நிருத்துகின்ற
    நிபந்தனையற்ற அன்பு...!

உண்மையில் இது
    உலகின் உன்னதம் தான்
உண்மையான உணர்வுகளி ல்
    வாழ்கின்ற வாழ்வை
திரும்பப் பெறுகையில்...!


Thursday, 27 October 2011

மாசுருதல்

மானுடம் வாழ
       மண்ணை மலையாய் பிளந்தது மண்புழு
மௌனமாய் மரணமுற
      முனைப்புடன் தெளித்தான்
மண்ணுயிர்க்கொல்லியை.....

கறையில்லா காசியில்
      புனிதமாய் விளங்கியது கங்கை
தொழிலென தோலைக் கழுவி
     தூரத்தில் விட்டான் அதன் துரைதனில்
கருவூண் வாழா கல்லறையாகிறது
       தினம் தினம் .....

ஒவ்வொரு உயிரும் ஓங்கி தழைக்க
    ஓடாய் நின்றது ஓசோன் படலம் அதன்
ஓரமாய் கணக்காய் கரியை கலந்து
    காத்து நின்ற காவலனின்
கருணையை கரைத்துப் பார்க்கிறோம்
    தினம் தினம்.....


பூமித்தாயின் வயிற்றில்
    குண்டினை வைத்து - தாயின்
கற்பம் கலைக்கும் கல்வனே
    காலதச்சனின் மாற்றத்திற்க்கு ஏற்ப
நீ மாறாவிட்டால் பூமிப்பந்து
    பாதகப் பொருளாய்
போகியில் போட்டெரிக்கப்படும்....

Saturday, 22 October 2011

உணரப்படா உழவு

தினமும் வியர்வைத்துளியால்
      வேகாத உடலும்
விதைக்காத
     விதை நெல்லும் முளைத்துவிட....

கானகத்தில் கலம் நின்று
     கருத்துவிட்ட கருணை உள்ளத்தின்
விலா எலும்பும் தோய்வுற்று
    தொல்லை கொடுக்க
கடுகடுக்கும் கால்களால்
     சேருமிதித்து நட்டுவிட்ட நாத்துகளும்
நா லுனாள் பெய்த மழையில்
     நலிந்து விட...

நடை தளர்ந்த காளை மாடும்
     கடும் உழைப்பில் களைப்பாற
காலமில்லாது களமிறங்கி
     பயர் வகையை விதைத்த பின்னும்
விதி விட்ட பாடில்லை
   விளையாடிய கார்மேகம் விரயம் செய்ய
ஒன்றிரண்டு செடிகல் ஓரமாய்...


பூ பூத்து காய்காக்க
     களைப்பறித்து கண்ணில் காத்து
அறுத்துவிட்ட அறுவடை நாளில்
     அறுவர் கொண்ட படை அதன்
தரம் பார்க்க தரிகெட்டு நின்றவனாய்...

தரணியில் தானாய் வாழத்
      தகுதி பெற்றவன் தடுமாறும்
தாறுமாறு உலகம்...

ஊருக்கே உணவலிக்கும்
      உழவனுக்கு உழுதுவிட்ட சேரும்
மட்டும்தான் மிச்சமோ
     சோருகூட எச்சமோ....

Monday, 17 October 2011

அநாதை

அன்னையின் அன்பு உனக்கு
     அர்த்தமற்றது அவளின்
அரவணைப்பு உனக்கு
      நிழல்களில் மட்டும் - அனால்
உண்மையான உள்ளுணர்வு கொண்ட
      உன்னத மனிதர்கள் மட்டும்
உந்தன் சொந்தமாய்......

எவருக்கும் அமைவதில்லை
      அத்தனை உண்மையான உறவுகள்
எங்களைத் தாலாட்டுகின்ற
       தாய்மடியைத் தவிர......

Sunday, 9 October 2011

கும்பகோணம் தீ விபத்து [16/07/04]

விடியலை உதயம் செய்ய
        உதிக்கின்ற சூரியனே
உன்னிலான இயக்கம் அன்று
       இயங்காமல் இருந்திருக்கலாம்...!

மனித இயக்கதை
      சீரமைக்கும் கடிகார முள்ளே
உந்தன் அசைவு அன்று
     அசைவின்றி இருந்திருக்கலாம்...!

கல்விக் கடல் கரையானதால்
      ஆசைகள் பலமானதால்
கவனம் கரைபுரண்டு
       கல்விக்கண் திறக்க வந்த கல்மனத்தார்
தன் உயிர் காத்து பறந்ததால்...!

எத்தனையோ
      அடையாலம் தெரியா ஸ்பரிசங்கள்
வடுக்களாய் நம்மில் அந்த
       அடையாலம் தெரியா
கொடும் தீயால்...!