Friday, 22 July 2011

காவலன்

உண்மையான உழைப்பையும்
    உள்ளத்தின் உள்ளுணர்வுகளையும்
உணராதவனா தலைவன்
    இல்லை - அவன்
தன் முன்னேற்றத்திற்கு
    பலியிடப்பட்ட
உயிர்களின் இரகசியம் காக்கும்
    பிணக்காவலன்....


வரதட்சணைக் கொடுமை

பூவாய் பிறந்து
    புன்னகையில் பூத்தவள்
கண்ணகியாய்
       காத்திருந்தும்...!

வந்த சொந்தம்
        கருக வைக்க
வாரி இரைத்தது
       மண்ணெண்ணையோ...!



Thursday, 21 July 2011

நம்பிக்கை

கண்ணீருடன்
     நடந்த பாதையும் காவியமாகலாம்
கண்ணகியின்
     பாதச் சிலம்பு போல....


Friday, 15 July 2011

ஆதாரம்

தாயின் கருவறை
          நிசப்தம்....

என்னவென்று புரியாத
    மழலைப் பேச்சு...

திசை அரியா
    தென்றலின் தழுவல்.......

எங்கிருந்தோ வருகின்ற ஒற்றை
    பாடலின் உள்ளிருப்பு சோகம்....

என்றும் புன்னகையுடன்
    பூக்கின்ற பூக்கள்..

காதலனைக் கண்டவுடன்
    மேகத்திற்குள் முகம் மறைக்கும்
வெண்ணிலவின் நாணம்..

இவையெல்லாம் நம்
    சந்தோஷத்தின் ஆதாரமாக...


Thursday, 14 July 2011

முரண்பாடு

பாலையில் 
       நீர் கேட்டு
வளரத்துடிக்கும் 
      ஈச்சம்புதராய் அவன்...!

சிறிது 
     நேர தாகத்தை
தாங்கிக் கொள்ளா 
     மணிப்புறவாய் அவள்...!

சிதறவிட்ட
    உமிழ் நீரில் 
வாழ்கிறது சிலந்தி...!

சிதறவிட்ட
    சிந்தனையில் 
வீழ்கிறது மனிதம்...!

பூக்கின்ற 
     பூக்கள் கூட
பூமியை 
   அழகாக்கிப்  பார்க்கின்றன...!

புதைபடும் 
      மனிதம் நாம்
புதைமண்ணை 
      புரட்டிபோட்டு
புண்ணாக்குகிறோம்
     புதுப்பொருளை உருவாக்கும்
புதைதிருந்த
     பழம் பொருளைத் தேடிதேடி...!


Wednesday, 13 July 2011

எழுச்சி

வாசனை அற்ற
        எருக்கம் பூக்களாய்
எரியப்படுகிறேன்
        எலும்புகள் வாழும்
எரி நிலத்தில்...!

எழும்பிய மேகம் - என்னை
       எழுப்புவதாய் உணர்கிறேன்
உருவாவேன்  - நான்
      எரி நிலத்திலிருந்து
எழுந்த வந்த
     ஏழையின் சேவகனாக...!


Tuesday, 12 July 2011

மூங்கில்

அங்கம் நனையும் ஆசையில்
        மழையினை மணக்கும் மூங்கில்
உயர்ந்தாலும் தாழ்ந்திருப்பேன் என....
       தழுவுகின்ற் குளிர்த் தென்றலில்
தவழுகின்றது தாய் மடியில்
       புரலுகின்ற சேயைப் போல...


அரசியல் வாதி

பரிவு என்ற சொல்லைக் கூறி
          பிரிவு என்ற பிளவை வளர்த்து
வறுமையெனும் கோடு காட்டி
         வளர்ச்சி அடைகின்ற.....
வறண்டு போன மனம்கொண்ட வள்ளல்....


Friday, 8 July 2011

பெண் சிசு தாயிடம்

கருவில் கலையும் பெண் சிசு தன் தாயிடம் கூறும் இறுதி வார்த்தைகள்....


மரணமடைந்து
         மண்ணுக்குள் புதைகிறேன்
உந்தன்
        முகம் பார்ப்பதற்குள்...!

உயிருடன் உடல்
        இணைவதற்குள் பிரிகிறேன்
உந்தன் உலகம்
        உலவுவதற்கு...!

மண்ணில் மரணம்
         என்பது இயற்கை
கருவில் கலைவதென்பது
            என் கருணை...!