பனி மூடிய சூழ்நிலையில்
முழு முகம் காட்டிய
கதிரவனின்
கதிர் வீச்சு...!
மை இருட்டில்
மண் விளக்கில்
ஏற்றப்பட்ட
தீப ஒளி...!
அநீதியை கண்டு
நடுங்கி நின்ற
கூட்டத்திலிருந்தும்
கல்லெறிந்த
சிறுவனின்
மன எழுச்சி...!
உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசும்
உறவு
கொள்ளாமை…!
கடந்து வந்த
தவறுகளில் வாழக்
கற்றுக்கொண்ட
அறிவு...!
எறியப்பட்ட கற்கள்
வாழ்வின் படிகளாய்
மாறுகின்ற
வரம்...!
Wednesday, 17 September 2014
Sunday, 10 August 2014
இரயில் நிலையம்
நீல வானம்
நில மகளின்
மீது கொண்ட
காதலின் பரிமாற்றத்தில்
மழை அங்கே
வலுத்திருக்க...!
மித வேகத்து
மின் தொடர் வண்டி
குறுக்கிட்டதில்
முகம் நனைத்த
மழைச் சாரல்...!
முகத்தின்
பிரதி பிம்பத்தை
முத்துக்குள் சுமந்து
கொண்ட இலைகளும்
மௌனத்தின் அழகினை
முழுமையாய்
சூடிக் கொண்டிருந்த - அவ்
அந்தி வானம்...!
எடுக்க எடுக்க
குறையாத எண்ணங்களும்
அழித்தாலும் அடைந்தாலும்
தேய்ந்துபோகா ஆசைகளும்
கரைந்து போக
தோன்றிய தோற்றமாய் - அக்
காரிருள் பொழுது...!
நில மகளின்
மீது கொண்ட
காதலின் பரிமாற்றத்தில்
மழை அங்கே
வலுத்திருக்க...!
மித வேகத்து
மின் தொடர் வண்டி
குறுக்கிட்டதில்
முகம் நனைத்த
மழைச் சாரல்...!
முகத்தின்
பிரதி பிம்பத்தை
முத்துக்குள் சுமந்து
கொண்ட இலைகளும்
மௌனத்தின் அழகினை
முழுமையாய்
சூடிக் கொண்டிருந்த - அவ்
அந்தி வானம்...!
எடுக்க எடுக்க
குறையாத எண்ணங்களும்
அழித்தாலும் அடைந்தாலும்
தேய்ந்துபோகா ஆசைகளும்
கரைந்து போக
தோன்றிய தோற்றமாய் - அக்
காரிருள் பொழுது...!
Friday, 1 August 2014
நம்பிக்கையின் வேரா அவள்?
தடுமாறிய கால்கள்
தடம் மாறிய பாதை
தொடும் தூரம்
தொலைவானாலும்
தொடங்கிய பாதை மட்டும்
முடிவதில்லை என
தோய்வுற்றிருக்க...!
ஒருத்தி மட்டும்
உயிர் கொடுத்தால் - அவன்
நம்பிக்கையின்
முதல் துடிப்பிற்கு
பிரிந்தது உடலானாலும்
பிணைந்திருப்பது
அவள் உயிர்
என்று சொல்லி...!
தடம் மாறிய பாதை
தொடும் தூரம்
தொலைவானாலும்
தொடங்கிய பாதை மட்டும்
முடிவதில்லை என
தோய்வுற்றிருக்க...!
ஒருத்தி மட்டும்
உயிர் கொடுத்தால் - அவன்
நம்பிக்கையின்
முதல் துடிப்பிற்கு
பிரிந்தது உடலானாலும்
பிணைந்திருப்பது
அவள் உயிர்
என்று சொல்லி...!
Friday, 25 July 2014
இறுதி நாள்
கற்பனையில் அந்த இறுதி நாள் ...
நீலவானம்
- அன்று
நெருப்பு மழை
பொழியும்
- தான்
எற்றுக்கொண்ட கரைகளை
கண்ணீறாய்
வெளியேற்ற...!
சுற்றி வந்து
தழுவலில்
சுகம் தந்து செல்லும்
தென்றல்
- அன்று
தெளித்து விட்டு போகும்
தன்னை சூழ்ந்துகொண்ட
அழுக்குகளின் அமிலத்தில்...!
எழுகின்ற
சுரியன்
ஏரி பிழம்பினை
விட்டெறியும்
நிலமகளின்
நிலைகுலைந்த
ஈர்ப்பு விசை
மாற்றத்தில்...!
அமைதியே
உருவானவளின்
அடிவயிற்றில் சேர்த்துவைத்த
கழிவுகள்
கலங்கடிக்க
மனித படைப்புகளுக்கு
வலை விரிக்கப் போகும்
கடல் கன்னி...!
கோட்டைகளும்
கோடிகளும்
இமயம் வரை
ஓடி
ஒளிந்து
கொள்ள
ஒளி உருவாய்
தோன்றியவன்
சொல்லப் போகும்
ஒற்றை வரி - இங்கு
மனிதம் உருவாக்கிய
வேற்றுமைகள்
உருவமற்று போனது - எந்தன்
மறு படைப்பிற்கு...!
Tuesday, 15 July 2014
பிறப்பு
முதன் முறை
முகம் பார்க்க
கண் இமை திறந்த
சிறு குழந்தை
பாதி மயக்கத்திலிருந்தும்
பதறி எடுத்த
முத்தமிட்ட தாய்...!
தாயின் கருவரை
தந்துவிட்ட
சுகத்தின் இழப்பில்
தொண்டைக் குழி
ஏறி இறங்க
அழுதிருந்த குழந்தை
வாரிசு வந்ததென
வாரி அணைக்கின்ற
வயதானோர்கள்...!
நாட்களுடைய மாற்றத்தின்
மாறுபட்ட ஸ்பரிசமும்
உள்ளத்தில் உலகம்
விதைக்கப்போகும்
உணர்வுகளை
வண்ணங்களாய் ஏற்கப் போகும்
வெள்ளை காகிதமாய் - அவ்
வெளுத்துப் போன
பிள்ளை முகம்...!
முகம் பார்க்க
கண் இமை திறந்த
சிறு குழந்தை
பாதி மயக்கத்திலிருந்தும்
பதறி எடுத்த
முத்தமிட்ட தாய்...!
தாயின் கருவரை
தந்துவிட்ட
சுகத்தின் இழப்பில்
தொண்டைக் குழி
ஏறி இறங்க
அழுதிருந்த குழந்தை
வாரிசு வந்ததென
வாரி அணைக்கின்ற
வயதானோர்கள்...!
நாட்களுடைய மாற்றத்தின்
மாறுபட்ட ஸ்பரிசமும்
உள்ளத்தில் உலகம்
விதைக்கப்போகும்
உணர்வுகளை
வண்ணங்களாய் ஏற்கப் போகும்
வெள்ளை காகிதமாய் - அவ்
வெளுத்துப் போன
பிள்ளை முகம்...!
Subscribe to:
Posts (Atom)