Tuesday, 24 December 2013

சேருமிடம்

மலர்களின் வாசனையை
     சுமந்து கொள்ளும்
மண்ணில் விழுகின்ற
      மழைத் துளி...!

பனி விழுந்த
       பின்னும் விடியாத
வானிலையில்
       வண்ணத்துப் பூச்சியின்
உடல் ஒட்டியிருந்த    
      மினுமினுப்பு...!

தென்றலின் தழுவளில்
       தனை மறந்து
இசை மீட்டும்    
       உதவாதென
விட்டு ஏறியப்பட்ட
       உடைந்து போன
 மூங்கில்...!

Saturday, 14 December 2013

கண்டெடுக்காத


அவன் கல்லறையின்
     மீதிருந்த ஒற்றை
ரோஜா கூறிற்று
     அவன் இறப்பின்
ரகசியத்தை...!

அவன் உறவுகளின்
      விழி வழியே
வழிந்திருந்த
       கண்ணீர் காட்டியது
அவன்
      கண்டெடுக்கா  அன்பின்
ஆழத்தை...!

உறவுகளின்
     வறையரையை விட
அன்பு உயர்ந்தது - அது
      கிடைக்குமிடம்
எதுவானாலும்..!

Wednesday, 11 December 2013

உலகம்

மென்மையான ஸ்பரிசமும்
      மெல்லிய சுவாசமும்
வாழுகின்ற போராட்டத்தில்
      சிதைந்து போகும்
சித்திரக் கூடம்...!

ஏற்ற இறக்கங்கள்
       எதுவானாலும்
சமத்துவத்தில்
       சரிந்து போகா
சோதனைச் சாலை...!

ஆணவங்கள் அழிந்துபோயி
      அன்பினில் மட்டும்
வாழுகின்ற
      வரம் தந்த
அன்னையின் ஆலயம்...!

சரித்திரங்களும்
      சாம்பலாகும்
சத்தியமும் சகதியில்
      நிருத்தப்படும்...!

இவ்வுலகம் மட்டும்
      கற்பனைக்கு எட்டாத
காலமாற்றத்தின்
      கலங்கரை விளக்காய்...!

Thursday, 5 December 2013

வறுமை

உதிர்ந்து விட்ட
     விண்மீண்களை
கோர்க்க வந்த
     மின்னல் ஒளி...!

ஊர் உறங்கும்
    வேளையிலும்
குடை பிடித்த
     கரு மேகம்...!

கண்ணிமை இமை
     தொட்டுச் சென்ற
குளிர் காற்று - அங்கும்
     கந்தல் உடை
அணிந்து வந்த
     சிறுவன்...!

காணுமிடமெங்கும்
      காற்று முழுவதும்
நிறைந்துவிட்ட
      கருணை - நம்
நெஞ்சில் நிலைத்து
      நிற்கா கொடுமை...!

Saturday, 30 November 2013

புதுமை

புதிதாய் மலர்ந்திருந்த
      மலர் சூடிக்கொண்ட
புன்னகை…!

மண்ணுக்குள் மூச்சிமுட்டி
       புதைந்திருந்த விதையின்
முதல் தளிர்தல்…!

வீசுகின்ற புயல் காற்றில்
        கரை தொட்டுவிட்ட
துடுப்புகளின் நிம்மதி…!

புதிதாய் பொங்குகின்ற
       நீறுற்றில் பெற்றுக்கொண்ட
புத்துணர்வு…!