மலர்களின் வாசனையை
சுமந்து கொள்ளும்
மண்ணில் விழுகின்ற
மழைத் துளி...!
பனி விழுந்த
பின்னும் விடியாத
வானிலையில்
வண்ணத்துப் பூச்சியின்
உடல் ஒட்டியிருந்த
மினுமினுப்பு...!
தென்றலின் தழுவளில்
தனை மறந்து
இசை மீட்டும்
உதவாதென
விட்டு ஏறியப்பட்ட
உடைந்து போன
மூங்கில்...!
Tuesday, 24 December 2013
Saturday, 14 December 2013
கண்டெடுக்காத
அவன் கல்லறையின்
மீதிருந்த ஒற்றை
ரோஜா கூறிற்று
அவன் இறப்பின்
ரகசியத்தை...!
அவன் உறவுகளின்
விழி வழியே
வழிந்திருந்த
கண்ணீர் காட்டியது
அவன்
கண்டெடுக்கா அன்பின்
ஆழத்தை...!
உறவுகளின்
வறையரையை விட
அன்பு உயர்ந்தது - அது
கிடைக்குமிடம்
எதுவானாலும்..!
Wednesday, 11 December 2013
உலகம்
மென்மையான ஸ்பரிசமும்
மெல்லிய சுவாசமும்
வாழுகின்ற போராட்டத்தில்
சிதைந்து போகும்
சித்திரக் கூடம்...!
ஏற்ற இறக்கங்கள்
எதுவானாலும்
சமத்துவத்தில்
சரிந்து போகா
சோதனைச் சாலை...!
ஆணவங்கள் அழிந்துபோயி
அன்பினில் மட்டும்
வாழுகின்ற
வரம் தந்த
அன்னையின் ஆலயம்...!
சரித்திரங்களும்
சாம்பலாகும்
சத்தியமும் சகதியில்
நிருத்தப்படும்...!
இவ்வுலகம் மட்டும்
கற்பனைக்கு எட்டாத
காலமாற்றத்தின்
கலங்கரை விளக்காய்...!
மெல்லிய சுவாசமும்
வாழுகின்ற போராட்டத்தில்
சிதைந்து போகும்
சித்திரக் கூடம்...!
ஏற்ற இறக்கங்கள்
எதுவானாலும்
சமத்துவத்தில்
சரிந்து போகா
சோதனைச் சாலை...!
ஆணவங்கள் அழிந்துபோயி
அன்பினில் மட்டும்
வாழுகின்ற
வரம் தந்த
அன்னையின் ஆலயம்...!
சரித்திரங்களும்
சாம்பலாகும்
சத்தியமும் சகதியில்
நிருத்தப்படும்...!
இவ்வுலகம் மட்டும்
கற்பனைக்கு எட்டாத
காலமாற்றத்தின்
கலங்கரை விளக்காய்...!
Thursday, 5 December 2013
வறுமை
உதிர்ந்து விட்ட
விண்மீண்களை
கோர்க்க வந்த
மின்னல் ஒளி...!
ஊர் உறங்கும்
வேளையிலும்
குடை பிடித்த
கரு மேகம்...!
கண்ணிமை இமை
தொட்டுச் சென்ற
குளிர் காற்று - அங்கும்
கந்தல் உடை
அணிந்து வந்த
சிறுவன்...!
காணுமிடமெங்கும்
காற்று முழுவதும்
நிறைந்துவிட்ட
கருணை - நம்
நெஞ்சில் நிலைத்து
நிற்கா கொடுமை...!
விண்மீண்களை
கோர்க்க வந்த
மின்னல் ஒளி...!
ஊர் உறங்கும்
வேளையிலும்
குடை பிடித்த
கரு மேகம்...!
கண்ணிமை இமை
தொட்டுச் சென்ற
குளிர் காற்று - அங்கும்
கந்தல் உடை
அணிந்து வந்த
சிறுவன்...!
காணுமிடமெங்கும்
காற்று முழுவதும்
நிறைந்துவிட்ட
கருணை - நம்
நெஞ்சில் நிலைத்து
நிற்கா கொடுமை...!
Saturday, 30 November 2013
புதுமை
புதிதாய் மலர்ந்திருந்த
மலர் சூடிக்கொண்ட
புன்னகை…!
மண்ணுக்குள் மூச்சிமுட்டி
புதைந்திருந்த விதையின்
முதல் தளிர்தல்…!
வீசுகின்ற புயல் காற்றில்
கரை தொட்டுவிட்ட
துடுப்புகளின் நிம்மதி…!
புதிதாய் பொங்குகின்ற
நீறுற்றில் பெற்றுக்கொண்ட
புத்துணர்வு…!
மலர் சூடிக்கொண்ட
புன்னகை…!
மண்ணுக்குள் மூச்சிமுட்டி
புதைந்திருந்த விதையின்
முதல் தளிர்தல்…!
வீசுகின்ற புயல் காற்றில்
கரை தொட்டுவிட்ட
துடுப்புகளின் நிம்மதி…!
புதிதாய் பொங்குகின்ற
நீறுற்றில் பெற்றுக்கொண்ட
புத்துணர்வு…!
Subscribe to:
Comments (Atom)
