மென்மையான ஸ்பரிசமும்
மெல்லிய சுவாசமும்
வாழுகின்ற போராட்டத்தில்
சிதைந்து போகும்
சித்திரக் கூடம்...!
ஏற்ற இறக்கங்கள்
எதுவானாலும்
சமத்துவத்தில்
சரிந்து போகா
சோதனைச் சாலை...!
ஆணவங்கள் அழிந்துபோயி
அன்பினில் மட்டும்
வாழுகின்ற
வரம் தந்த
அன்னையின் ஆலயம்...!
சரித்திரங்களும்
சாம்பலாகும்
சத்தியமும் சகதியில்
நிருத்தப்படும்...!
இவ்வுலகம் மட்டும்
கற்பனைக்கு எட்டாத
காலமாற்றத்தின்
கலங்கரை விளக்காய்...!
Wednesday, 11 December 2013
Thursday, 5 December 2013
வறுமை
உதிர்ந்து விட்ட
விண்மீண்களை
கோர்க்க வந்த
மின்னல் ஒளி...!
ஊர் உறங்கும்
வேளையிலும்
குடை பிடித்த
கரு மேகம்...!
கண்ணிமை இமை
தொட்டுச் சென்ற
குளிர் காற்று - அங்கும்
கந்தல் உடை
அணிந்து வந்த
சிறுவன்...!
காணுமிடமெங்கும்
காற்று முழுவதும்
நிறைந்துவிட்ட
கருணை - நம்
நெஞ்சில் நிலைத்து
நிற்கா கொடுமை...!
விண்மீண்களை
கோர்க்க வந்த
மின்னல் ஒளி...!
ஊர் உறங்கும்
வேளையிலும்
குடை பிடித்த
கரு மேகம்...!
கண்ணிமை இமை
தொட்டுச் சென்ற
குளிர் காற்று - அங்கும்
கந்தல் உடை
அணிந்து வந்த
சிறுவன்...!
காணுமிடமெங்கும்
காற்று முழுவதும்
நிறைந்துவிட்ட
கருணை - நம்
நெஞ்சில் நிலைத்து
நிற்கா கொடுமை...!
Saturday, 30 November 2013
புதுமை
புதிதாய் மலர்ந்திருந்த
மலர் சூடிக்கொண்ட
புன்னகை…!
மண்ணுக்குள் மூச்சிமுட்டி
புதைந்திருந்த விதையின்
முதல் தளிர்தல்…!
வீசுகின்ற புயல் காற்றில்
கரை தொட்டுவிட்ட
துடுப்புகளின் நிம்மதி…!
புதிதாய் பொங்குகின்ற
நீறுற்றில் பெற்றுக்கொண்ட
புத்துணர்வு…!
மலர் சூடிக்கொண்ட
புன்னகை…!
மண்ணுக்குள் மூச்சிமுட்டி
புதைந்திருந்த விதையின்
முதல் தளிர்தல்…!
வீசுகின்ற புயல் காற்றில்
கரை தொட்டுவிட்ட
துடுப்புகளின் நிம்மதி…!
புதிதாய் பொங்குகின்ற
நீறுற்றில் பெற்றுக்கொண்ட
புத்துணர்வு…!
Monday, 25 November 2013
வீரம்
பிறந்தது
சதை பிண்டமானாலும்
வாள் கொண்டு
கிழித்து புதைத்த
மரபு...!
உடன் பிறப்புகளின்
உதிரம் சிதறினாலும்
உணர்வுகளில்
உதிக்க மறந்துவிட்ட
வீரம்...!
கலங்கமற்ற தாயின்
வாழ்வினை
கல்லிலே செதுக்கிட
கங்கை வரை
களம் கண்ட
வரலாறு..!
கலங்கிய பெண்மையின்
வழக்கிலும்
வறண்டு போன
நம் உதிரத்தின்
கொதிப்பு...!
சதை பிண்டமானாலும்
வாள் கொண்டு
கிழித்து புதைத்த
மரபு...!
உடன் பிறப்புகளின்
உதிரம் சிதறினாலும்
உணர்வுகளில்
உதிக்க மறந்துவிட்ட
வீரம்...!
கலங்கமற்ற தாயின்
வாழ்வினை
கல்லிலே செதுக்கிட
கங்கை வரை
களம் கண்ட
வரலாறு..!
கலங்கிய பெண்மையின்
வழக்கிலும்
வறண்டு போன
நம் உதிரத்தின்
கொதிப்பு...!
Monday, 18 November 2013
முத்தொழில்
மூன்று முகம்
கொண்டவனால் உருவாகி
உடல் உருமாறியவன்
உதவியிலே
உலகில் வாழ்ந்துவிட்டு
உடுக்கை ஏந்திவனின்
ஆட்டத்திலே அடங்கிவிடும்
மனித கூட்டம்...!
கொண்டவனால் உருவாகி
உடல் உருமாறியவன்
உதவியிலே
உலகில் வாழ்ந்துவிட்டு
உடுக்கை ஏந்திவனின்
ஆட்டத்திலே அடங்கிவிடும்
மனித கூட்டம்...!
Subscribe to:
Posts (Atom)